Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, June 19, 2014

What is Keepwell Agreement

Keepwell agreement is the agreement between parent company and its subsidiary company in which parent company gives the written promise that it will keep the solvent to its subsidiary company if there is the risk of insolvency up to end of agreement. This agreement may be 5 years or 10 years or any period which has been mentioned in the agreement.



This agreement is very important because all the company who gives the loan to subsidiary company will use this written keepwell agreement as the guarantee for repayment. Some financial company will give loan to subsidiary company if its parent company will do such agreement with its subsidiary company because all such financial company or companies feel risk when it or they will give loan to subsidiary company.

For example, One of the famous Japanese's  telecom company's subsidiary company wants to start his business in India. There is already big competition in Indian market. But subsidiary company has the confidence to grow in Indian market. For this, it need  Rs. 1000 billion. No financial institute wants to give such big debt. One financial institute is ready to give same debt if its parent company will do the agreement of keepwell with its parent company for 10 years. Its parent company has $ 200 capital. So, it has good reputation in the market. On this offer, its parent company did the same written agreement. On this agreement, its subsidiary company has obtained Rs. 1000 billion debt. Now, if in 10 years, subsidiary company will not pay its debt, parent company will pay for keeping its subsidiary company as solvent company.

This agreement will increase the creditworthiness of subsidiary company. Following is the sample of keep-well agreement.


Amortization of Bond Issue Costs

When a company issues bond or debenture, company has to pay the professional fees, registration fees and other issue cost, all these cost are long term asset. For written off all these cost, we need to amortization of bond issue cost.
In simple words, amortization of bond issue costs is the transfer of bond issue cost from asset to the debit side of profit and loss account. On the basis of life of bonds, we will amortize. If there is $ 2,00,000 bond issue cost and life of bond is 10 years. We will amortize $ 20,000 from total bond issue cost because we are taking benefit from $ 20,000 bond issue cost. Every year, we transfer $ 20,000 to the debit side of profit and loss account or showing as expense in income statement. After 10th year, there will not any balance of bond issue cost in the asset side of balance sheet.

Reason of Amortization of Bond Issue Costs

1.  When we paid large amount of bond issue cost, we can not take the benefit from this expense. So, this expense became a capital expenditure. After issuing bond, we got the money. So, upto the life of bond, we have used this money. So, we divide total bond issue cost with the life of bond. Every year, we show just this part out of total bond issue cost in the income statement.

2. Bond Issue Costs is just like expenses paid in advance but services are not received. So, there is no right to show all bond issue cost in expenses side of income statement. We follow accounting standard and as per accounting standard, we just convert total bond issue costs in small parts. Every part will be transfer to expense side of income statement as amortization. 

How to Amortize Intangible Assets

Amortization is the process in which we decrease the value of intangible assets like depreciation is the decrease in the value of tangible assets. There are two benefits of amortization of intangible asset. One is : it will help to show the correct current value of intangible asset. Second is : amortization funds will help to replace the old intangible asset.


Following is the Simple formula of Amortization of Intangible Asset Per Year



  • Initial cost of intangible asset = Buying cost + Other Direct Cost for Buying Such Intangible Asset 
  • If there are more than one intangible asset, we will calculate each intangible asset's per year amortization value. 
  • We do not calculate the amortization  the value of goodwill, brand and logo because these intangible assets life is unlimited. We can not determine their useful life. We also do not calculate the amortization value per year for tangible asset in this category because we have to calculate depreciation other long term tangible assets. 
  • We can calculate the amortization value per year for patent, copyright, trademark and other intellectual property rights like business license. 

Example : M/S Rahul and Publishers Company has the copyrights on 1000 books which it has bought by paying Rs. 40,00,000 for 20 years. So, Amortization value of copyrights per year will be

= Initial Costs of Copyrights / Useful life of copyrights

= 40,00,000 / 20 = Rs. 2,00,000

Every year, value of copyright intangible asset will decrease will amortization value of Rs. 2,00,000. If have saved same from our every year income, it means at the end of 20 th year, we have enough fund to buy new copyrights for next 20 years. 

Important to Know : 

  • In some organisations, there will not any differentiate of amortization and depreciation because formula of amortization is just same as straight line of depreciation. 
  • If we have more than one intangible asset, we will calculate each's amortization value and then we will do gross total of amortization value of different asset per year. 

How to Motivate Yourself to Learn Accounting Regularly

Whether you have just started learning accounting or you're an experienced accountant, there will be times when you lack the motivation to get out there, despite the benefits it brings. This article suggests a number of ways to bring back the enthusiasm, to ease into it, and to ensure that you stay motivated to learn accounting on a regular basis.



1. Begin to Learn Accounting Slowly

 Most beginners try to learn practical and start to solve problems; this is a mistake. You have to start to learn accounting theory slowly and at the beginning point.

2. Commitment of Giving Time 

If you are really enjoy to learn new things in accounting, you have to motivate yourself by commitment of giving time. It may be 10 minutes to 1 hour or more time. You have to set it as your goal and apply for month.

3. Learn Accounting with Different Keyword

Online, you can use different keyword instead of writing accounting. Instead of writing accounting, you can search debit and credit, BRS, accounting software or give the name of accounting software. Everywhere you can write in search box and you can start to learn more about accounting. It is fun. In facebook, you can find lots of fan page of each term of accounting. You can follow and you can learn. On google, you can find lots of blogs on each term of accounting. Subscribe them and learn from them.

4. Stay Motivated by Sharing Your Knowledge Also 

If you want to stay motivated for long period, you have to share past learned concept. It will give you more enjoy. It is rule, when the fuel in car will stop, we add more. When you share your knowledge, you will find more problems from those who are your fan. For satisfying them, you need more knowledge, so, you will always be updated in accounting. 

மெமரி ஸ்கேல்


பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம். அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்துள்ளன. எனவே அவற்றை இங்கு காணலாம்.
ஒரு கிலோ பைட் (kilobyte)= 1,024 பைட்ஸ்
ஒரு மெகா பைட் (megabyte)=1,024 கிலோ பைட்ஸ்
ஒரு கிகா பைட் (gigabyte)=1,024 மெகா பைட்ஸ்
ஒரு டெரா பைட் (terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்
ஒரு பெட்டா பைட் (petta byte) = 1,024 டெரா பைட்ஸ்
ஒரு எக்ஸா பைட் (exa byte)=1,024 பெட்டா பைட்ஸ்
ஒரு ஸெட்டா பைட் (zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்
ஒரு யோட்டா பைட் (yotta byte) = 1,024 ஸெட்டா பைட்ஸ்
கம்ப்யூட்டர் கணக்கில் ஒரு கிலோ என்பது 2 டு த பவர் ஆப் 10 (2^10) அதனால் தான் 1,024 எனக் கிடைக்கிறது. ஒரு சிலர் இதனை 10 டு த பவர் ஆப் 3 (10^3) என எடுத்துக் கொள்கிறார்கள். ட்ரைவ்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட இது போல சமயங்களில் எடுத்துக் கொள்வதால் தான், நமக்கு 1,024 க்குப் பதிலாக 1,000 கிடைக்கிறது.

நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்? கண்டுபிடிக்கும் சூட்சுமங்கள்!


‘சொந்தமாகத் தொழில் தொடங்கி, ஒரு பிசினஸ்மேனாக வலம் வரவேண்டும் என்பது என் மனத்தில் இருக்கும் நீண்டநாள் ஆசை. சொந்தத் தொழில் தொடங்குவதற்கு கையில் ஓரளவுக்கு பணமும் இருக்கிறது. ஆனால், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. நல்ல லாபம் கிடைக்கிற மாதிரி, எனக்கு தோதான ஒரு பிசினஸை சொல்ல முடியுமா?’
இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டபின்னும் பதில் கிடைக்காமல் தவிப்பவர்கள் பலர். ஒருகாலத்தில் பிசினஸ் என்றாலே அதில் இறங்க பலரும் பயப்படுவார்கள். ஆனால், இன்றைக்கு நிறைய இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைந்தது; பிசினஸ் நடைமுறைகள் ஓரளவுக்கு எளிதாக இருப்பது என சமீபத்தில் நடந்த பல மாற்றங்களின் விளைவாக, இன்றைய இளைஞர்களின் கவனம் பிசினஸ் பக்கம் திரும்பியிருக்கிறது.
என்றாலும், தனக்கான தொழில் எது என்பதைத் தேர்வு செய்வதில் பலருக்கும் பலவிதமான குழப்பம். ஏற்கெனவே தெரிந்த தொழிலை செய்வதா, புதிதாகக் கற்றுக்கொண்டு செய்வதா என பல கேள்விகள். உங்களுக்கான தொழிலை நீங்கள் கண்டுபிடிப்பது எப்படி?
சொந்தத் தொழில் செய்வதற்கான விருப்பமுள்ளவர்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வோம்:
1. முன்பின் வேலைக்குச் செல்லாத வர்கள் அல்லது தொழில் அனுபவம் சிறிதும் இல்லாதவர்கள் (இருபது வயதில் உள்ள இளம் வயதினர்).
2. சில ஆண்டுகள் வேலைக்குச் சென்றவர்கள் (முப்பது/நாற்பது வயதில் இருப்பவர்கள்).
3. ஓய்வுக்காலம் வரை வேலையில் இருந்தவர்கள் (ஐம்பது / அறுபதுகளில் இருப்பவர்கள்).
முதலில், இளம்வயதினரைப் பார்ப்போம். இந்த வயதினருக்கு அதிக முதிர்ச்சி இருக்காது. ஆகவே, ஓரிரு நண்பர்களுடன் அல்லது சற்று முதிர்ச்சியான நபர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தால், தொழிலைக் கற்றுக்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இவர்கள் கல்லூரியில் படித்தபோது ஏதேனும் புராஜக்ட் செய்திருந்தார்களேயானால், அதைச் சார்ந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.
இளம் வயதினர் என்பதால் சற்று புதிய தொழில்நுட்பம் உள்ள தொழில்களை அல்லது ஆராய்ச்சி சார்ந்த தொழில்களை ஆரம்பிக்கலாம். வேறு தொழிலதிபர்களுடன் ஒப்பிடும்போது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் இவர்களிடம் இருக்கும் மிகப் பெரிய அனுகூலம் ஆகும்.
எந்தத் தொழில் செய்ய விருப்பம் என முடிவு செய்துவிட்டால், ஓராண் டாவது அந்தத் தொழிலில் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அனுபவம் பெறுங்கள். அனுபவம் இல்லாமல் எந்தத் தொழிலிலும் இறங்கி ஜெயிக்க முடியாது.
தொழில் ஆர்வமுள்ள இளம் வயது வாலிபர்களுக்கு எந்தத் தொழிலைப் பார்த்தாலும் அதைச் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்தச் சமயம் ஆர்வத்தை ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டு யதார்த்தத்தில் தனக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என நன்கு யோசிக்க வேண்டும்.
இந்த வயதினருக்குத் தொழில் அனுபவம் இருக்காது என்பதால், புதிதாக எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் இறங்கலாம். ஏனென்றால், எந்தத் தொழில் என்றாலும் இவர்களுக்குப் புதிய ஆரம்பம்தான். இவர்கள் முதலில் எந்தத் துறையில் நல்ல வாய்ப்பு உள்ளது, எந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் மற்றும் நல்ல லாபம் இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அந்தத் துறை தங்களுக்குப் பிடிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அல்லது தங்களால் அந்தத் துறையை நேசிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
பொதுவாக, இந்த வயதினரிடம் அதிகமாகப் பணம் இருக்காது என்பதால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களை நாடலாம். ஐ.டி, லாஜிஸ்டிக்ஸ், புரோக்கிங், டிரேடிங், சுற்றுலா திட்டமிடல், சர்வீஸ் மையங்கள் போன்ற சேவைத் தொழில்களை ஆரம்பிக்கலாம். சிறிய வயது என்பதால் அவர்களால் நன்றாக அவர்களின் சேவைகளை/ உற்பத்தி செய்யும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய முடியும்.
இனி, இரண்டாவது தரப்பினரைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் சில ஆண்டு மட்டுமே வேலைக்குச் சென்றவர்கள். வேலை பிடிக்காமலோ அல்லது வேலை திடீரென்று போய்விட்டதாலோ அல்லது தொழில் செய்வதன் மீது உள்ள அளவிட முடியாத ஆர்வத்தினாலோ அல்லது இரண்டாவது வருமானம் தேடியோ தொழில் செய்ய முன்வருவார்கள்.
இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தொழில் பற்றிய ஞானம் ஓரளவுக்கு இருக்கும். அதன் நெளிவுசுழிவுகள் புரிந்திருக்கும். ஓரளவுக்கு முதிர்ச்சியும் வந்திருக்கும். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைப் பொறுத்து, அந்தத் தொழில் பற்றிய விவரங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகவே, இந்த அறிவை வைத்து அதே தொழிலையோ அல்லது அது சார்ந்த தொழிலையோ ஆரம்பிப்பதுதான் உசிதமாக இருக்கும்.
இவர்கள் ஏற்கெனவே பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்க லாம். அந்த நிறுவனத்திலிருந்து விலகியபின் அந்த நிறுவனத்துடன் நல்ல உறவு வைத்திருக்கலாம். அப்படி  இருப்பவர்கள், அந்த நிறுவனம் தரும்   கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்யலாம். அந்த நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து வாங்கித்தரலாம்.
பெரிய தொழில் நிறுவனங்களில் இன்ஜினீயராக வேலை பார்த்தவர்கள், தன்னோடு நன்கு பழகிய, திறமைசாலி நண்பர்களுடன் சேர்ந்து, புதிதாக தொழில் தொடங்கலாம். ஏற்கெனவே செய்த தொழிலோடு உங்களுக்கு எந்தளவு உறவு உள்ளதோ, அந்த அளவுக்கு உங்கள் வெற்றி உறுதி!
இனி, மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். நான் ஓய்வுபெறுகிற வரை ஆட்டோமொபைல் துறையில் அல்லது வங்கியில் வேலை செய்தேன் என்று சொல்பவர்கள், அந்தத் துறை சார்ந்த தொழிலை ஆரம்பிப்பதுதான் சிறந்தது. காரணம், முன்பின் தெரியாத ஒரு தொழிலை இந்த வயதில் புதிதாகத் தெரிந்துகொண்டு செய்வதைவிட, ஏற்கெனவே நன்கு தெரிந்த தொழிலில் ஜெயிப்பது சுலபம். தவிர, வயது அதிகம் என்பதால், முற்றிலும் புதிய தொழிலில் நுழைந்து ரிஸ்கும் எடுக்க முடியாது.
உதாரணமாக, வங்கியில் வேலை பார்த்தவர்கள் வங்கிகளுக்கு ஆடிட்டிங் செய்துதரலாம் அல்லது லோன் பிராசஸிங் ஏஜென்சி நடத்தலாம். கடன் ஆலோசகராகத் தொழில் செய்யலாம். இப்படி பலவிதமான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து, அந்தத் தொழில் செய்து எளிதில் ஜெயிக்க முடியும்.
ஃப்ரான்சைஸிங் (Franchising)
என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்கிறவர்கள்   ஃப்ரான்சைஸிங் (Franchising)   முறையின் மூலம் தொழில் துவங்கலாம். இதில் ஃப்ரான்சைஸர் (Franchisor) தொழில் பற்றிய நுணுக்கங்கள், தொழிலுக்குத் தேவையான தளவாடங்கள், பொருட்கள் போன்ற அனைத்தையும் தொழில் ஆரம்பிப்பவருக்குத் தந்துவிடுவார். இதற்கான கட்டணத்தையும், கமிஷனையும் தந்துவிட்டு, வியாபாரத்தைப் பெருக்க வேண்டிய வேலை உங்களுடையது.
ஃப்ரான்சைஸிங் மூலம் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, உங்களுக்குத் தோதான ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்து ஜெயிக்கலாம்!
உங்களுக்கான தொழிலை கண்டுபிடிக்கும் சூட்சுமம் இப்போது புரிந்ததா?

கிளக்கோமா பார்வையை பறிக்கும் கண் அழுத்தம்!


ஐம்புலன்களில் முக்கியமானது கண். கண்ணை இமை காப்பது போல என்று சொல்வோம்… கண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சொல் இது. அந்த அளவுக்குப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம். சாதாரண கண் நோய் அல்லது நாள்பட்ட கண் நோயைத்தான் பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம்.
அறிகுறிகள் இன்றி கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையை மங்கச் செய்து, பார்வையை முழுமையாகப் பறிக்கும் ஒருவகை நோய் தான் ‘கிளக்கோமா’ (glaucoma) என்னும் ‘கண் அழுத்த நோய்’. தற்போது, பரவலாகக் கண்டறியப்பட்டு வரும் இந்த நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைமுறைகள் .

அழுத்தம் இருக்கும். நம் கண்களின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து, பார்வை நரம்பினால் தாங்கக்கூடிய அளவைத் தாண்டும்போது, ‘கிளக்கோமா’ என்னும் பிரச்னை ஏற்படுகிறது.
இந்த அழுத்தத்தை ‘கண் அழுத்தம்’ (Intraocular pressure) என்பர். சாதாரணமாக இந்த அழுத்தத்தின் அளவு 15முதல் 20 mm/Hg இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரிக்கும்போதும் ‘கிளக்கோமா’ ஏற்படும்.
கண் அழுத்த நோயை, ‘திறந்த கோண கண் அழுத்த நோய்’ என்றும், ‘மூடிய கோண கண் அழுத்த நோய்’ என்றும், இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
மூடிய கோண கண் அழுத்த நோய் (closed angle glaucoma ) சட்டென்று உருவாகக்கூடியது. மிகுந்த வலியை உண்டாக்கி, உடனடியாக பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். ஆனால், இதில் உண்டாகும் அசௌகரியத்தினால், நிரந்தர சேதம் உண்டாகும் முன்னரே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். திறந்த கோண (open angle Glaucoma நாள்பட்ட கண் அழுத்த நோய், மெள்ள முன்னேறும் தன்மை கொண்டது. இதில் நோய் மிகவும் முதிர்ந்த நிலையை அடையும் வரையிலும் நோயாளிகள் தாம் பார்வையிழப்பை அடைந்திருக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கக்கூடும். சில சமயங்களில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும்.
இதில், முதல் வகை கிளக்கோமா மற்றும் இரண்டாம் வகை கிளக்கோமா என 2 வகைகள் உள்ளன. முதல் வகை, மரபு வழி சார்ந்தது. பிறவியிலேயே இந்தப் பாதிப்பு இருக்கும். எனவே, இவற்றை முன்கூட்டியே கண்டறிந்து இந்தப் பாதிப்பை நீக்க வேண்டும்.
இரண்டாம் வகை கிளக்கோமா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் ஸ்டீராயிட் வகை மருந்துகளை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் வரும். சமயங்களில் கண்ணில் ஏதாவது அடி, கண்ணில் சதை வளர்ச்சியினால் ஏற்படும் அழுத்தம், காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் எந்த அறிகுறி களையும் இது வெளிப்படுத்தாது, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது இது. சில சமயங்களில் மேற்பரப்பான பார்வையில் ஒட்டு போன்றதொரு பார்வையிழப்பையோ அல்லது நிறங் களின் துல்லியம் குறைந்து காண்ப தையோ உணரலாம்.
கோணம் மூடிய கிளக்கோமாவின் அறிகுறிகள், விழிப்பந்தின் உள்ளே அல்லது அதைச் சுற்றிலுமான வலி, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் விளக்குகளைச் சுற்றிலுமான வட்டம் போன்ற பார்வையில் இடையூறுகள் ஏற்படும். சில நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் ஒன்றும் இல்லாமலும் இருக்கலாம்.
சிகிச்சைகள்:
கோனியோஸ்கோப் மூலமாக உள் அறையின் (Angle of the anterior chamber)  அளவை அளவிடலாம். ‘ஆப்டிக்கல் கொஹிரண்ட் டோமோகிராபி’ என்னும் நவீன முறை இதனைக் கண்டறியப் பயன்படுகின்றது. இவை அனைத்தும் கண்ணில் உள்ள அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது.
ஆரம்ப நிலை எனில், இதனை சொட்டு மருந்து மூலமாகவே குணப்படுத்திவிட முடியும். கொஞ்சம் வலி ஏற்படும் ஆனால், நாளடைவில் அது சரியாகிவிடும். அப்படியும் சரியாகாமல் கண்ணில் அதிக வலி இருந்தால், லேசர் மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம். அதற்கு சாத்தியப்படாத தருணத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் இதனைக் குணப்படுத்த முடியும்.
ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும், மற்றொரு கண்ணையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், ஒரு கண் பாதிப்பின் பக்கவிளைவு, மற்றொரு கண்ணிலும் ஏற்படலாம்.
இந்த நோய்க்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. இதற்கு 40 வயதுக்கு மேல் சீரான இடைவெளியில் கண்பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பார்வை இழப்பில் இருந்து தப்பிக்கலாம்!’
அட்டை சிகிச்சை! மருத்துவ வரலாற்றில், கிளக்கோமா கண் நோய் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. கிரீஸ் நாட்டில் அப்போதே அட்டைகளை (leeches) கண்களில்விட்டு அந்த அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.
பெண்களே அதிகம்! கண் அழுத்த நோயானது, 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது. 50 அல்லது அதற்குக் கீழ் வயதானவர்களில் 200 பேரில் ஒருவரையும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்துல் ஒருவரையும் பாதிக்கிறது. ஆண்களைவிட, பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

டிஜிட்டல் எழுத்தின் அளவு


கம்ப்யூட்டரில், அச்செடுப்பில், எழுத்து ஒன்றின் அளவு, point என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. இது அச்செழுத்து வடிவம் சார்ந்த அளவு கோலாகும். இந்த அலகின் அளவு ஓர் அங்குலத்தில் 72ல் (1/72) ஒரு பங்கு. அச்சுத் துறையில், எழுத்தின் அளவைக் குறிக்க, இதுவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேர்ட் புரோகிராமிலும் இந்த point அளவே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் 12 பாய்ண்ட் எழுத்து ஒன்றைப் பயன்படுத்துகையில், அது ஓர் அங்குலத்தில் ஆறில் ஒரு பங்கு 12/72 ( அல்லது 1/6) இடத்தை எடுத்துக் கொள்கிறது. எழுத்தின் மேல் நிலையிலிருந்து (riser) கீழாக (des cender) இதன் அளவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.எனவே, 72 பாய்ண்ட் அளவில் எழுத்து ஒன்றைப் பயன்படுத்தினால், அது ஓர் அங்குல உயரத்திலான பெட்டி அளவில் அமர்ந்து கொள்கிறது.
இந்த point அளவினை நாம் நன்றாகப் புரிந்து கொண்டால், வேர்ட் புரோகிராமில் இதனையே அடிப்படை அலகாக வைத்துச் செயல்படலாம். இதனைக் குறிக்க pt என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, கீழ்க்காணும் வழிகள் மூலமாகவும், வேர்டில் எழுத்தின் மாறா அளவி நிலையை அமைக்கலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் கட்டத்தின் கீழாக இடது பக்கம் இந்த டேப் காணப்படும். வேர்ட் 2010 மற்றும் வேர்ட் 2013 புரோகிராம்களில், ரிப்பனில் பைல் டேப்பினைத் தேர்ந்தெடுத்து, அதில் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கீழாகச் செல்லவும். Display என்பதனைக் கண்டறியவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், Show Measurements in Units என்பதனைப் பயன்படுத்தி, Points என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து சேவ் செய்திடவும்.

ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானமா? வரியில் இனி, ரூ.7210 மிச்சமாகும்


வருமான வரி விதிப்பு உள்பட மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று வழங்கியது. மக்களவையில் இந்த மசோதா வரும் 30ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
நாட்டில் தனி நபர் வருமானத்தில் ரூ.1.6 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கு இந்த வரம்பு ரூ.1.8 லட்சமாக உள்ளது. வருமான வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை 6வது சம்பள கமிஷன் அறிக்கை அமலுக்கு பிறகு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேரடி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி, தற்போதுள்ள வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. பெண்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு 30 சதவீத வரியும் இனி வசூலிக்கப்படும்.
இதனால் ரூ.4 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.7210 மிச்சப்படும். ரூ.7 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 10300, 10 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு ரூ.18540 மிச்சப்படும். நிறுவனங்களை பொறுத்தவரை அவற்றுக்கான வரி 34 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான வரிவிதிப்பில் இனி கூடுதல் வரி மற்றும் உபவரிகள் போன்ற தொல்லை இருக்காது. உள்நாட்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு இந்த மசோதா வகை செய்கிறது.
வரிவிகிதங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும் பழைய நடைமுறை கைவிடப்படுகிறது. இந்த மசோதா மக்களவையில் வரும் 30ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

புதுடெல்லி: வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் 11ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சம்பளதாரர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கின்றனர். தற்போது, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் 30 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இதனை அப்போதைய மத்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள புதிய பாஜ அரசு, முதல் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவதால் அதிகம் பலன் அடைய போவது மாத சம்பளம் பெறுபவர்கள்தான். இதனால், இவர்களின் பொருட்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்பதால், வருமான வரி விலக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் வீட்டுக்கடன், மெடிக்கல் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் வருமானவரி சலுகைகளையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நேரடி வரி விதிப்பு வரைவுச் சட்டத்தில், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு அதிகமாக வருமானம் கொண்ட பெரும் பணக்காரர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையும் நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. Share this:


புதுடெல்லி: வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் 11ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சம்பளதாரர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் 30 சதவீதம் வரியும்  வசூலிக்கப்படுகிறது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இதனை அப்போதைய மத்திய அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள புதிய பாஜ அரசு, முதல் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவதால் அதிகம் பலன் அடைய போவது மாத சம்பளம் பெறுபவர்கள்தான்.
இதனால், இவர்களின் பொருட்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்பதால், வருமான வரி விலக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் வீட்டுக்கடன், மெடிக்கல் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் வருமானவரி சலுகைகளையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நேரடி வரி விதிப்பு வரைவுச் சட்டத்தில், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு அதிகமாக வருமானம் கொண்ட பெரும் பணக்காரர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையும் நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

செக்ஸ் அடிமை


குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
Anesthaesia experienced wine drunk from it again and again and again about mila cintittupe some people can not enjoy being sex slaves. Because of this addiction any time thinking about it, such as daily personal tasks without even cause trouble.
இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.
* அடிக்கடி சுய இன்பம் காணுதல்
* பலடவேறு உறவுகள்
* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
* செக்ஸ் துன்புறுத்துதல்
* கற்பழித்தல்
* அதிக பாட்னர்களை விரும்புதல்
இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.  இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் – மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.
பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன.
எப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்?


முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள். காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். ஆகவே, அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.
இது உண்மைதான். ஒரு 25 சதம் கவர்ச்சி உள்ள பெண் அழகு சாதனங்கள் மூலம் 75 சதம் கவர்ச்சியாகவும், அழகாகவும் தன்னைக் காட்டிக் கொள்ள முடியும்! ஆகவேதான், பெண்கள், பல தோற்றங்களில் தன்மை அழகுபடுத்திக் காட்டி, ஆண்களைச் சுலபமாகக் கவருகிறார்கள்! ஒரு பெண்ணால், எது இல்லாவிட்டாலும், அழகு சாதனங்கள் இல்லாமல் ஒருக்காலும் இருக்க முடியாது! இன்று உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும், கன்னிகாஸ்திரீயைப் போல,எந்த அழகு சாதனத்தையும் உபயோகிக்காமல் இருந்தால், உலகத்தில் உள்ள 75 சதம் வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வார்கள்! ஏன், ஜனப் பெருக்கம் கூட சுலபமாகக் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

எக்ஸெல் டிப்ஸ்-படுக்கை வரிசை இணைக்க

செல்களைக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா! 
படுக்கை வரிசை இணைக்க: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் கீணிதீண் தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும். 
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர், F4 பட்டனை அழுத்தினால், அடுத்தடுத்து வரிசைகள் இணைக்கப்படும். 
இன்னொரு வழி இதைக் காட்டிலும் எளிய வழியாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஐந்து வரிசைகள் இணைக்கப்பட வேண்டும் என விரும்பினால், அந்த வரிசை சென்று, தொடர்ச்சியாக ஏற்கனவே இருக்கும் ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த முதல் வரிசைக்கு மேலாக, எக்ஸெல் ஐந்து வரிசைகளை இணைத்திருக்கும். இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம். 
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப் படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்

பணம் கொட்டும் தொழில்கள்- செயற்கை மலர்கள்!


வீடுகள், அலுவலகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது ஃபேஷனாகவே மாறிவிட்டது. இப்படி மலர்களைக்கொண்டு அலங்கரிப்பதன் மூலம் அழகும் ரம்மியமும் கூடுவதால் அதற்கு முக்கியத்துவம் தருகின்றன நிறுவனங்கள். இயற்கை மலர்களைக் கொண்டு அலங்கரிக்க ஆகும் செலவு அதிகம் என்பதால், செயற்கை மலர்களைக்கொண்டு, அந்த இடத்தை அலங்கரிக்கும் போக்கு தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.
செயற்கை மலர்களைப் பராமரிப்பதும், கையாள்வதும் எளிது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்கிற சாதகமும் உண்டு. தவிர, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் அலங்கார தேவைகளுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், செயற்கை மலர்களுக்கான சந்தை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. குறைவான முதலீடு, எளிதான சந்தை வாய்ப்பு கொண்ட தொழில் இது. 
  உற்பத்தித் திறன்!
நமது திட்டத்தின்படி, தினசரி 25 கிலோ செயற்கை மலர்கள் உற்பத்தி செய்யலாம். இதன்படி, மாதத்துக்கு 625 கிலோ உற்பத்தி செய்யமுடியும். நாம் தோராயமாக 600 கிலோ என்று கணக்கு வைத்துக்கொள்வோம். 
  இயந்திரங்கள்!
இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரம் 1oz (சைஸ்) : 2
இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரம் 0.5 oz (சைஸ்) : 2
அச்சுகள் (தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம்). ஹீட் சீலிங் இயந்திரம், மேசைகள், மற்றும் இதர கருவிகள். இந்தக் கருவிகள் மொத்தமும் ரூ.3 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.
  தயாரிப்பு முறை!
வடிவமைக்கப்பட்டுள்ள அச்சில் தேவைக்கேற்ப அக்ரலிக் குழாய்கள், தகடுகளைப் பொருத்தி இன்ஜெக்ஷன் மோல்டிங் முறையில் உருவாக்கப்பட வேண்டியதுதான். இப்படி உருவாக்கப்படும் மலர்களை ஒருங்கிணைக்கும் தேவையிருந்தால் அந்த வேலைகளையும் செய்தபின் வடிவத்துக்கேற்ப பேக்கிங் செய்து அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
  மூலப்பொருள் செலவு!
இதன் பிரதான மூலப்பொருள் ஹெச்.டி.பி.இ. / எல்.டி.பி.இ. என்பதாகும். மாதம் 600 கிலோ உற்பத்திக்கு 500 கிலோ ஹெச்.டி.பி.இ. / எல்.டி.பி.இ. தேவைப்படும். இதன் விலை ரூ.80 (500X80= 40,000) அக்ரலிக் குழாய்கள், கம்பிகள் 100 கிலோ தேவைப்படும். இதன் விலை ரூ 100. (100X100=10,000). கம்பி பசை மற்றும் இதர தேவைகள் ரூ.2,000. ஒரு மாதத்துக்குத் தேவையான மூலப்பொருள் செலவு 52,000. (40,000+10,000+2,000).
  பேக்கிங் செலவு!
உற்பத்திக்குப்பின் உத்தேசமாக 720 கிராம் வீதம் பேக்கிங் செய்யலாம். பேக்கிங் செலவு ஒரு பாக்கெட்டுக்கு ரூ.8 செலவாகும். இதன்படி மாதம் 600 கிலோ உற்பத்தி என்றால் 833 பாக்கெட்கள். இதற்கான செலவு ரூ.6,664. (தோராயமாக ரூ. 6,700)
  பணியாளர்கள்!
மேற்பார்வையாளர்     : 10,000
திறன் பணியாளர்கள்: 2 X 8000 : 16,000
பணியாளர்கள்    : 2 X 8000 : 16,000
உதவியாளர் 1 =                5,000
மார்க்கெட்டிங்
பணியாளர்கள்:          1X10 : 10,000
மொத்தம்                   : 57,000
  நிர்வாகச் செலவுகள்! (ரூ.)
வாடகை     : 10,000
மின்சாரம்                  : 10,000
அலுவலக நிர்வாகம்     : 10,000
பராமரிப்பு      :  5000
ஏற்று / இறக்கு கூலி            : 10,000
இதர பொருட்கள்             : 20,000
மொத்தம்                    : 65,000
நடைமுறை மூலதனச் செலவுகள்:
மூலப்பொருட்கள்             : 52,000
சம்பளம்                    : 57,000
பேக்கிங்                     : 6,700
நிர்வாகச் செலவுகள்            : 65,000
மொத்த செலவுகள்: 1,80,700 (நடைமுறை மூலதனத்துக்கு வங்கிக் கடன் கிடைக்கும்)
விற்பனை வரவு!
உற்பத்திக்குப்பின் உத்தேசமாக ஒரு பாக்கெட் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். இதன்படி, மாதம் 833 பாக்கெட்கள் மூலம் ரூ.2,08,250 விற்பனை வரவு.
  கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)
மூலதனக் கடன்
திருப்பம் 60 மாதங்கள்        : 5,000
மூலதன கடன் வட்டி 12.5%      : 3125
நடைமுறை
மூலதன கடனுக்கான வட்டி      : 1890  
மொத்தம்                    : 10015
_______
மொத்த வரவு               : 208250
மொத்த செலவு              : 180700
கடன் மற்றும் வட்டி திருப்பம்    : 10015
_______
லாபம்                        : 17,535

நகர்ப்புற வீடுகளில் வளரும் காய்கறி தோட்டங்கள்


வீடுகளில் தோட்டம் வளர்த்து பராமரிப்பது ஒரு தனிக்கலை. கிராமப்புறத்தில் தோட்டம் அமைப்பதற்கேற்ற வசதிகள் அதிகம். ஆனால், நகர்புறத்தில் இந்த வசதி குறைவுதான். அதையும் தற்போது சாத்தியமாக்கி வருகிறார்கள், இன்றைய வேளாண் விஞ்ஞானிகள்.
சதுர அடிக்குள் அழகிய தோட்டத்தை உருவாக்க வழிகள்:
* ஜன்னலில் பொருந்துகிற அளவில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் மண்ணை நிரப்பி, உங்களுக்குப் பிடித்தமான செடியை அதில் நடுங்கள்.
* பால்கனியில் இருந்து வரும் சூரிய ஒளி செடியின்மீது படும்படி பக்கெட்டை நேராக வைத்துக் கொள்ளுங்கள்.
* தென்பக்கத்தில் இருந்து சூரிய ஒளி செடியின்மீது விழுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால், செடி வேகமாக வளரும். படர்கொடி வகை தாவரங்கள் இன்னும் வேகமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
* இதன் விதைகள் சில சமயங்களில் வீட்டின் வெளிப்புற சுவரையும் தாண்டி, மண்தரையில் விழுந்து வளர ஆரம்பித்து விடுகிறது. இதனால், புதிதாக மரம் நட்ட பலனும் உங்களுக்கு கிடைக்கிறது.
* வேம்பு, கொய்யா, மாதுளம்பழம் போன்ற மரங்களை உங்கள் வீட்டைச் சுற்றிலும் வளர்த்து வந்தால் பிற்காலத்தில் அவற்றால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
* சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன.
* நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது.
* நகர்ப்புற மக்களும் இனி விவசாயிகளாக மாறலாம். உங்கள் வீட்டிலேயே ஒரு ஓரமாக விரும்பிய தாவரங்களை வளர்த்து அழகிய கிராமப்புற சூழலை உருவாக்கலாம். அதனால் கிடைக்கும் பலன்களால், தனியொரு மனிதனுக்கு உண்டாகும் உணவுப்பஞ்சமும் தீர்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம் என்ற வார்த்தைகள் இனி கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.

மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்


பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.
1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட, மவுஸ் + ஷிப்ட் கீகளைப் பயன்படுத்த இடம் தருகின்றன. தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும். எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.
இந்த வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம். டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும்.
2. டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம். இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது. இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம். பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.
3. இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.
4. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம். சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம்.
5. இரண்டு மற்றும் மூன்று முறை கிளிக்: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.
6. டெக்ஸ்ட் ஹைலைட் அல்லது எந்த ஒரு ஆப்ஜெக்ட்டின் ப்ராப்பர்ட்டீஸ் அறிய, அதன் மீது எப்போதும் ஒரு ரைட் கிளிக் செய்தால் போதும். ஒரு சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து, காப்பி செய்து கொண்டால், அந்த சொல்லை எப்போதும், எந்த இடத்திலும் ரைட் கிளிக் செய்து பேஸ்ட் செய்திடலாம்.
இதே போல, மவுஸின் ரைட் கிளிக் மூலம், ஒரு பைல் அல்லது டெக்ஸ்ட் ஒன்றை கிளிக் செய்து இழுத்துச் சென்று, ஓரிடத்தில் விட்டுவிடுகையில், அந்த பைலை அதன் இடத்திலிருந்து நகர்த்த வேண்டுமா அல்லது காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்படும். இது நம் நேரத்தை வீணடிக்காத செயல்பாட்டினைத் தருகிறது. பைலை கிளிக் செய்து, காப்பி செய்து, பின்னர் இன்னொரு இடத்தில் சென்று வைத்திட சற்று நேரம் பிடிக்கும். இது மவுஸின் இந்த தனிச் செயல்பாட்டினால் எளிதாகிறது.
பிரவுசர் ஒன்றில் ஏதேனும் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், கண்ட்ரோல் பட்டனை அழுத்தியவாறு கிளிக் செய்தால், அங்கு அந்த லிங்க் தொடர்பாக ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று தரப்படும்.
7. கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் கிளிக் செய்தால் வரிசையாக அமையாத பைல்கள் அல்லது டெக்ஸ்ட் பகுதிகளை ஹைலைட் செய்திடலாம்.
8. மொஸில்லா பயர்பாக்ஸ் பயனாளர்கள், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, டேபிள் ஒன்றில் உள்ள, தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு செல்லினையும் தனித்தனியே கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
9. தற்போது வருகின்ற மவுஸின் வடிவமைப்பில், பக்கவாட்டிலும் பட்டன்கள் தரப்படுகின்றன. இந்த பட்டன்களைக் கொண்டு பல செயல்பாடுகளை செட் செய்திடலாம். மாறா நிலையில், இடது பக்கம் உள்ள பட்டன், இணையப் பக்கம் ஒன்றில், பின்னோக்கிச் செல்ல பயன்படும். இது நமக்கு வசதியாகவும், எளிமையாகவும் இருக்கும். பக்கத்தில் பின்னோக்கிச் செல்ல, மவுஸைத் தனியே நகர்த்தி, வலதுபுறம் உள்ள பாரில் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்து செல்லத் தேவையில்லை.
10. ஸ்நாப் டு பட்டனைப் பயன்படுத்தும் முறை ஒன்று தற்போது உள்ள மவுஸ் இயக்கத்தில் காணப்படுகிறது. டயலாக் பாக்ஸ் ஒன்றின் மூலம் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்கையில், அது உறுதியானதுதானா என நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டு, பின் நாம்,மவுஸின் கர்சரை ஓகே பட்டனுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றை அழிக்க கட்டளை கொடுத்தாலோ, விண்டோ ஒன்றை மூடுவதற்கு முயற்சி எடுத்தாலோ, உடனே ஒரு சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, இந்த செயல்பாட்டில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? என்ற வினா தரப்பட்டு, உங்களிடமிருந்து விடை எதிர்பார்க்கப்படும்.
இப்போது Snap To என்ற வசதி இயக்கப்பட்டிருந்தால், மவுஸின் கர்சர் தானாகவே, Ok பட்டனுக்குச் சென்று தயாராக இருக்கும். செயல்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், நீங்கள் மவுஸால் ஒரு கிளிக் செய்தால் போதும். இதனை எப்படி இயக்கி வைப்பது? என்று எண்ணுகிறீர்களா?
கண்ட்ரோல் பேனல் செல்லுங்கள். அங்கு Mouse properties என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Pointer Options என்ற டேப்பின் கீழ் கிடைக்கும் Snap To என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மவுஸ் செட்டிங்ஸ் பிரிவில், மற்ற வசதிகளையும் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, மவுஸின் செயல் வேகத்தினை அதிகரிக்கலாம். இதன் மூலம், நம் வேலைத் திறனில் வேகம் ஏற்படும்.
எந்த விண்டோவிலும், அதன் மேலாக உள்ள டைட்டில் பாரில் டபுள் கிளிக் செய்தால், விண்டோ அதிக பட்ச அளவில் விரித்துக் காட்டப்படும். ஏற்கனவே விரிக்கப்பட்டிருந்தால், அது சுருக்கிக் காட்டப்படும். எந்த விண்டோவிலும் அதில் இயங்கும் புரோகிராமிற்கான ஐகான் காட்டப்படும். இதில் டபுள் கிளிக் செய்தால், அந்த விண்டோ மூடப்படும். புதிய வடிவமைப்பில் வரும் பல மவுஸ்களில், இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. அவை எவை எனத் தெரிந்து கொண்டு முழுப் பயனையும் பெறலாம்.

பறவை வளர்ப்பு… பணத்துக்குப் பணம்; மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!


பறவைகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவை. அதனாலேயே பலரும் தங்கள் வீடுகளில் தனியாக ஒரு குடில் அமைத்து பறவைகளை வளர்த்து வருகிறார்கள். மனத்துக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதற்காகவே பறவையை வளர்க்க ஆரம்பித்தவர்கள், இன்று அதன்மூலம் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள்!
பண்ணை வைத்து வியாபாரம்!
கடந்த 16 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வியாபாரம் செய்வதையே தொழிலாகச் செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம் சத்திரம் புதூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.
”பள்ளிப் படிப்பை முடித்தபின் சிறு பறவைகளைப் பிடித்து வளர்க்க ஆரம்பித்தேன். காலப்போக்கில் அதில் என் ஆர்வம் அதிகரிக்க பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதன் பிறகுதான்  பறவைகளை வளர்க்க ஏன் ஒரு பண்ணையை ஆரம்பிக்கக்கூடாது என்கிற யோசனை எனக்கு வந்தது. இன்று என்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளி மற்றும் புறா வகைகள் இருக்கின்றன. சாதாரண வகைப் புறாக் களில் இருந்து 15 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள மெக்கோ பறவை வகை களையும் வளர்த்து வருகிறேன்” எனப் பெருமைபொங்கப் பேசினார் மூர்த்தி.
பறவைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
”பொதுவாக, பறவை இனங் களைப் பொறுத்து அவற்றைத் தனித் தனியாகத்தான் வளர்க்க வேண்டும். இந்தச் செயல் அந்தந்த பறவைகளை அதன் குணாதிசயங்களுடன் வளர வழிவகுக்கும். பறவைகளுக்கான கூண்டுகளை அமைக்கும்போது, அதற்கான கூண்டின் அளவு, அதில் அடைக்க இருக்கும் ஜோடி பறவைகள் எண்ணிக்கையைப் பொறுத்து அமைக்க வேண்டும். மெக்கோ, காக்டோ ஆகியவைப் பெரியதாக வளரும். நீண்ட நாட்கள் வாழக்கூடியவை. எனவே, இவற்றை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இவை மனிதர்களுடன் நன்கு பழகும் என்பதால் விலை அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இவற்றை விரும்புகிறார்கள். இவற்றை வளர்க்க சற்று பெரிய கூண்டு தேவைப்படும். இவை குஞ்சு பொரிக்கும் பருவத்துக்கு வர 10 ஆண்டுகள் ஆகும்” என்றவர், பறவை இனங்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் சொன்னார்.
பராமரிப்பு முக்கியம்!
”புறா இனங்களைப் பொறுத்தவரை, பல வகைகள் உள்ளன. மயில்புறா, சிராஸ், கோழிப்பிடங்கு, கிங் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம். இதில் மயில்புறா ‘லக்கான்’ என்று அழைக்கப்படும். இது மிகவும் அழகானது; நன்கு பழகும் தன்மை கொண்டது. இது ஒரு ஃபேன்சி ரகப் புறா. இதற்கு அதிகம் பறக்கத் தெரியாது. எனவே, வீட்டில் வளர்க்க ஏற்றது. இதில் பல வண்ணங்கள் உண்டு. இது ஒரு ஜோடி 1,000 முதல் 2,000 வரை விலை போகும். மாதம் ஒருமுறை குஞ்சு பொரிக்கக் கூடியது. இவற்றை சிறிய கூண்டுகளில் அடைக்கக்கூடாது. 25 ஜோடிகள் வரை 10ஜ்10 அளவுள்ள அறையில் வைக்கலாம். இதற்குத் தண்ணீர் மிக முக்கியமான ஒன்று. கம்பு, சோளம், கோதுமை, ராகி, பச்சை சோளம் போன்ற உணவுகளை அளிக்கலாம்.

கிங் புறாக்கள் பெயருக்கு ஏற்றாற் போல திறமையும் கவர்ச்சியும் வாய்ந்தவை. அதோடு மட்டுமல்லாமல், மிக நீண்ட தூரம் பறக்கும் தன்மை வாய்ந்தவை. சில சமயங்களில் 1,500 கி.மீ தூரம்கூட பறக்க வல்லது. இந்த இனப் புறாக்கள்தான் பந்தயத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஜோடி கிங் புறாக்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் கிடைக்கும். இவையும் தானிய வகைகளை நன்கு உண்ணும்.
லாபம் தரும் ஜோடிகள்!
கோழிப்பிடங்கு மற்றும் சிராஸ் ஆகியவை மாதம் ஒருமுறை ஒரு ஜோடி புறாக்கள் ஒரு ஜோடி குஞ்சு பொரிக்கும். இவை ஒரு ஜோடி 1,000 – 2,000 ரூபாய் வரை இருக்கும். இவை ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வாழும் தன்மையுடையவை. இவற்றை வளர்த்தால் நன்கு லாபம் பார்க்கலாம். உணவுக்குப் பெரியதாக செலவு செய்யவேண்டியதில்லை. நாள் ஒன்றுக்கு 50 கிராம் உணவு போதுமானது.
கிளி வகைகளைப் பொறுத்தவரை, லவ் பேர்ட்ஸ் மற்றும் காக்டெயில் வகைகள் மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. இவை அனைத்தும் விலை மலிவானவை. லவ் பேர்ட்ஸில் ஒரு ஜோடி 250 ரூபாய் முதல் கிடைக்கும். அமெரிக்கன் லவ் பேர்ட்ஸ் ஜோடி 2,000 ரூபாய் முதல் கிடைக்கும். இவை திணை, அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றை உண்ணும். இதை வளர்ப்பதால் நல்ல லாபம் கிடைக்கும்” என்றார் மூர்த்தி.
புறாக்களே என் நண்பர்கள்!
அடுத்ததாக, புறா வளர்த்து வியாபாரம் செய்து வரும் சென்னையைச் சேர்ந்த அசோக் குமாரை சந்தித்தோம். ”புறாக்கள் என்றாலே அழகுதான். வெண்மை நிற புறாக்களைப் பார்க்கும்போதும், அதன் அசைவுகளைக் கவனிக்கும்போதும் நம் மனது லேஸாவதை உணரலாம். மனத்தில் இருக்கும் பாரம் மொத்தமும் காணாமல்போய்விடும்” என்று தான் வளர்க்கும் புறாக்கள் பற்றி பெருமையாகப் பேசினார் அவர்.
”ஒருநாள் சாலையில் நடந்து செல்லும்போது, புறா ஒன்று ரோடில் அடிபட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தேன். அதற்கு நன்றிக் கடன் போல எனக்கு இன்று நிறைய வருமானம் ஈட்டித் தருகின்றன புறாக்கள்.
என்னிடம் தற்போது எட்டு வகையான புறாக்கள் உள்ளன. அனைத்தும் ஜோடிப் புறாக்கள். புறாக்களை விற்பதன் மூலம் எனக்கு  மாதம் 4,000 வரை வருமானம் கிடைக்கிறது.
இன்றைய நிலையில் புறாக்கள் சுமார் 200 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றபடி விலை போகின்றன. என் நண்பர்கள், உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே என் வாடிக்கையாளர்கள்.
புறாக்களை வாங்குபவர்கள் அதை நன்கு பராமரிப்பார்களா என்று விசாரித்து தெரிந்துகொண்ட பின்னரே அவர்களிடம் விலைக்குத் தருவேன். புறாக்கள் எனக்கு பணத்துக்கு பணத்தையும் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சியையும் தருகிறது” என்றார்.

ஆரோக்கியம் காக்கும் அமிலங்கள்


அன்றாட வாழ்க்கையில் பலவகையான சத்துக்களும் வைட்டமின்களும் சேர்ந்துதான் உடலை ஆரோக்கியமாக செயல்படவைக்கின்றன. ஒவ்வொரு சத்தும் உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்கு சத்துக்களைக் கொடுக்கின்றன. இவை உடலில் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவை அதிகமாக அல்லது குறைவாகச் சுரக்கும்போது, பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கிய அமிலங்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் மற்றும் எந்த மாதிரியான உணவுகள் மூலம் இவற்றை நிலைப்படுத்தலாம் என்பது பற்றியும் அறியலாம் .
நிக்கோடினிக் அமிலம் (நியாசின்)
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவை நிலைப்படுத்துவதற்கு நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு உடலில் குறையும்போது அதிகப்படியான டென்ஷன், சத்துக் குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டின் ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் அமிலத்தின் அளவை அதிகமாக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 18 மில்லி கிராம் வரை தேவை.
பேத்தொடெனிக் அமிலம்
உடம்புக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்ய பெத்தொடேனிக் அமிலம் தேவை. மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் இந்த அமிலத்தின் குறைவினால் ஏற்படும். முழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை மஞ்சள் கரு ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த அமிலக் குறைபாட்டை சரிசெய்துவிடலாம் நாள் ஒன்றுக்கு நபருக்கு 6 மில்லிகிராம் தேவை.
ஆஸ்கார்பிக் அமிலம்
வைட்டமின் சி தான் அஸ்கார்பிக் அமிலம். பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின், தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு உருவாக்கிக் கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் இரும்புச் சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. இந்த அமிலத்தன்மை குறையும்போது, ஈறுகளில் ரத்தம் வடிதல், ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மிளகை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த இழப்பைச் சரிசெய்யலாம். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலம் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான அளவு 40 மில்லி கிராம்.
ஃபோலிக் அமிலம்
ரத்த சிவப்பணுக்களைத் தூண்டுவதற்கும், அவற்றின் முதிர்ச்சித் தன்மைக்கும் ஃபோலிக் அமிலம் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் அவசியம் தேவைப்படக்கூடிய அமிலம் இது. இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியதும்கூட. காசநோய், கேன்சர் நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள், கோதுமை, முந்திரிப் பருப்பு போன்ற உணவுகளின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 200 மைக்ரோகிராம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு 500 மைக்ரோகிராம் வரை தேவைப்படும்.
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
இந்த அமிலம் மட்டும்தான் நம் வயிற்றிலேயே சுரக்கக்கூடியது. இரைப்பையில் அமில காரத் தன்மையை நிலைநிறுத்தி உணவைச் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.
அமிலம் இரைப்பையில் குறைந்தால் செரிமான கோளாறுகள், வயிற்று உப்பசம், அதீத தூக்கம், அடிக்கடி பசி, தொற்றுநோய் போன்றவை ஏற்படும். அமிலம் இரைப்பையில் அதிகமானால் வயிற்றுபுண், ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். இந்த அமிலம் நிலைத்தன்மையில் இருப்பது அவசியம். மிளகு, வினிகர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிலைப்படுத்தமுடியும். சிலருக்கு இயல்பாகவே இந்த அமிலம் குறைவாக இருக்கும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்’.

Friday, June 13, 2014

Mass Mailing Reminder Letters in Tally.ERP 9

Tally.ERP 9 now provides the facility of Mass Mailing Reminder Letters. It helps the user in sending multiple Emails to the respective recipients on just a click of a button.

The following steps are to be followed for mass mailing Reminder Letters to Parties :

Step 1
Go to Multi Account Printing -> Outstanding Statements -> Ledger -> Group of Accounts -> Select a Group.
The user should have an Email Account in Gmail, Yahoo mail and Hotmail.¨ 
Click M : Email or Press Alt + M.

Step 2
Enter the following in these fields :

  • E-Mail Server : Here enter the name of your SMTP server followed by the port number (For Example, smtp.gmail.com:465 or smtp.yahoo.com:455).
  • Use SSL : Set this Option to “Yes”.
  • Use SSL on Standard Port : Set this option to “No”. (Choose “Yes”, if using SSL on Default / Standard SMTP Port).
  • From : This field displays the name of the company that was entered during Company Creation and stored in the company masters.
  • From E-mail Address : This field displays the e-mail address entered while creating the company. (You can Enter other E mail ID Address too).
  • Authentication User Name : Enter same Email Address here again. 
  • Password : Enter the Password of the E-Mail ID given above.
  • Format : Set it as HTML (Web Publishing).
  • Resolution : Set it to 1024 x 768.
  • To Email Address : Set the option “All Ledgers”.
  • CC if Any : If you want to send same copy to any other Mail Address then feed in this option.
  • Subject : As per your want.
  • Additional Text : Write anything that you want to communicate through mail.
  • Information sent : Choose one option. (as per your need)
  • Email Reminder Letter : set this option to "Yes”.
Set the rest of the options as per your requirement in reports.



NOTE

  1. The Email of Reminder Letters will be sent to the Email IDs specified in the respective Ledger Masters of the parties.
  2. To specify or view the email id specified in the ledger masters, you have to go to exceptional Report -> Email Id -> Press F5 : All Items