Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, August 10, 2015

சீஸன் பழங்கள்

 ‘பருவம் அறிந்து பயிர் செய்’ எனச் சொல்வார்கள். அதைப்போலவே, அந்தந்தப் பருவத்தில் விளையும் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது. காரணம், சீஸன் பழங்களில்தான் அந்தந்தப் பருவத்தில் மனிதர்களுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் உள்ளிட்ட இந்தப் பூமியின் அனைத்து ஜீவராசிகளின் வாழ்வும் இயற்கையுடன் பிணைந்திருப்பதைப்போலவே, மனிதர்களின் வாழ்க்கையும் பருவநிலையுடன் இணைந்திருக்கிறது. இயற்கையே செய்திருக்கும் இந்த ஏற்பாட்டை நாம் பின்பற்றுவதுதான், முறையான… சரியான வாழ்வுக்கான வழிமுறை. மாறாக, வருடம் முழுவதும் மாம்பழம் வேண்டும் என்றால், மாதக்கணக்கில் பதப்படுத்தப்பட்ட மாம்பழச் சாறும், கார்ஃபைடு கல் கொண்டு பழுக்கவைக்கப்பட்ட மாம்பழமும்தான் கிடைக்கும். இதே நிலைதான் மற்ற பழங்களுக்கும்.
பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, விட்டமின்கள், தாது உப்புகள், கனிமங்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் மனித உடல் வளர்ச்சிக்கு அவசியமானவை; பலவிதமான நோய்களை வராமலும், பரவாமலும் தடுக்கக்கூடியவை. பழங்களின் முழுச் சத்துக்களையும் பெறவேண்டுமானால், அவற்றைக் கழுவி, சுத்தப்படுத்தி, தோலுடன் சாப்பிட முடிந்த பழங்களை அப்படியே  சாப்பிட வேண்டும். ‘பழம்தானே’ எனக் கடித்து விழுங்காமல், நன்றாக மென்று கூழாக்கி, சிறிது, சிறிதாக விழுங்கும்போதுதான் பழத்தின் மணத்தையும் சுவையையும் முழுமையாக உணர முடியும். இப்படிச் செய்யும்போது பழத்தின் பெரும்பாலான சதைப்பற்று சத்தாக மாற்றப்பட்டு கழிவுகள் குறைகின்றன.
உண்பதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, கொட்டை இல்லாத பழ வகைகளை வாங்குகிறோம். இதுபோன்ற ரகங்களுக்கு, அதிக அளவு பூச்சிக்கொல்லிகளும் வேதி உரங்களும் கொட்டப்படுகின்றன. எனவே, கொட்டை இல்லாத பழங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கொட்டை உள்ள பழங்களில், கொட்டையை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். கொட்டைகளின் மேல் ஓட்டுக்கும் உள்ளே இருக்கும் பருப்புக்கும் இடையில் சிறு சவ்வு இருக்கும். கொட்டையைப் பாதுகாக்கும் இந்தச் சவ்வையும் நீக்கிவிட வேண்டும்.
பழங்களை வாங்கும்போது, இயற்கையான அளவைவிட பெரியதாகவும் பளபளப்புடனும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. பழத்தின் தரம் என்பது, அதன் பளபளப்பில் இல்லை. சொல்லப்போனால் இயற்கையாக விளைந்த தரமான பழங்கள் ஒருபோதும் பளபளப்புடன் இருக்காது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழத்தின் காம்பு பச்சையாகவோ, சற்று காய்ந்து இருந்தாலோ, அந்தப் பழம் பறிக்கப்பட்டு குறைந்த காலமே ஆகியிருப்பதாக யூகித்து அதை வாங்கலாம். பழங்களின் மீது அதிகமான கறுப்புப் புள்ளிகள், வெள்ளை நிறத் தூள் வகைகள், சாயம், பூஞ்சை போன்றவை தென்பட்டால் அதைத் தவிர்க்கலாம். அதைப்போலவே முடிந்தவரை பழங்களை, பழங்களாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக உடலுக்குச் சென்று சேரும். மாறாக, பழத்தை நறுக்கி அதனுடன் சீனி, பால், ஐஸ், சுவையூட்டிகள், மணமூட்டிகள் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாகக் குடிக்கும்போது, நார்ச்சத்தும் சத்துமிகுந்த கனிமங்களும் வடிகட்டப்பட்டுவிடுகின்றன. அதனால் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் தேன் கலந்து ஜூஸ் பருகலாம்.
மிகுந்த சத்து நிறைந்ததாகக் கருதப்படும் ஆப்பிள், பெரும்பாலும் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. பறிக்கப்பட்டு மாதக்கணக்கில் பதப்படுத்திவைத்த பின்னரே அது கடைகளுக்கு வருகிறது. நீங்கள் உண்ணும்  ஆப்பிள், மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆனதாகக்கூட இருக்கலாம். இதனால் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, அதன் மீது மெழுகு தடவுகின்றனர். ஆப்பிளை லேசாக சுரண்டிப்பார்த்தாலே மெழுகு கையில் வரும். பெரும்பாலான மக்கள், தோலைச் சீவிவிட்டே பயன்படுத்துகிறார்கள். ஏதோ நம்மால் முடிந்து பாதுகாப்பு ஏற்பாடு. ஆனால், இப்படி மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.
வாதத்தைக் குறைக்கும் மாம்பழத்தை, ஆடி மாதத்துக்கு முன் சாப்பிடுவதே சிறந்தது. அப்போதுதான் உடல் சூடு குறையும்; வாய்ப்புண் நீங்கும். கோடையில் மட்டும் விளையும் வெள்ளரிப் பழம், உடலை சட்டெனக் குளிர்ச்சியாக்கும். இதை, கோடையில் சாப்பிடுவதே நல்லது. மாறாக தை மாதத்தில் சாப்பிட்டால், சீதோஷ்ணநிலை காரணமாக ஏற்கெனவே குளிராக இருக்கும் உடல்நிலையில் இன்னும் குளிர்ச்சியைச் சேர்த்துவிடும். துவர்ப்பு சுவை உள்ள நாவல்பழம், சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்; ஆஸ்துமாவைக் குறைக்கும். மாதுளம்பழத்தில் விட்டமின்-ஏ சத்து ஏராளமாக இருக்கிறது; உடலுக்குக் குளிர்ச்சியையும் தரக்கூடியது. அன்னாசிபழம், தோல் சுருக்கத்தைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்துகிறது. மெலனின் (விமீறீணீஸீவீஸீ) எனும் நிறமிக் குறைபாட்டை நீக்கவும், மூளை செல்களின் வளர்ச்சியைச் சீராக்கவும் சப்போட்டா பழம் உதவுகிறது. தாய்ப்பாலிலும் கடல் உணவுகளிலும் உள்ள விட்டமின்-பி12, சப்போட்டாவில் இருக்கிறது.
பருவத்தில் கிடைக்கும் இலந்தைப்பழம், உடல் தசையை உறுதியாக்குகிறது. இலந்தைப் பழம் வாங்கும்போது, எண்ணெய் தடவாத பழமா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். இதேபோல விளாம்பழம் நல்ல பசியை உண்டாக்கும். வில்வப்பழம் குளிர்ச்சியைத் தரும். உணவு உண்பதற்கு 45 நிமிடங்கள் முன்போ அல்லது உணவு உண்டு 1லு மணி நேரம் கழித்துதோ பழங்களைச் சாப்பிடுவது சிறந்தது. மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்துக்கும் தினமும் வெவ்வேறு வகையான பழங்களை 200 கிராம் உண்ண வேண்டும். சுண்ணாம்புச் சத்துக்கு சீத்தாப்பழம், இரும்புச்சத்துக்குப் பேரீச்சை, விட்டமின்-சி   சத்துக்கு நெல்லி… எனக் கலவையாகச் சாப்பிட வேண்டும். பெரும்பாலான பழங்களில் இயற்கையாக உள்ள துத்தநாகச்சத்து, குழந்தைகளின் மூளை செல் வளர்ச்சி சீராக இருக்க உதவுகிறது. எனவே, குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அனைத்து வகையான பழங்களையும் கொடுத்துப் பழக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான ரகங்களில் விளையும் வாழைப்பழத்தில், ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு மருத்துவக் குணம்கொண்டது. முடிந்தவரை நாட்டு வாழைப் பழங்களை வாங்குவதே சிறந்தது. அவை கனிந்த பழங்களாக இருக்க வேண்டும். வாழைப்பழத்தின் காம்பும் மஞ்சள் நிறமாக இருந்தால், அது ரசாயனம் போட்டு பழுக்கவைக்கப்பட்டதாக இருக்கலாம். ஆரோக்கியம் என்பது, தானாக வருவது அல்ல; நம் முயற்சியில் நாமே உருவாக்கிக்கொள்வது. இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் சத்துக்கள் நிறைந்த பழங்களை, சரியாக… முறையாகச் சாப்பிடுவதன் மூலம் உடலை இன்னும் உறுதியாக்கலாம்; இன்னும் இலகுவாக்கலாம்!
Thank You

கோனாசனம்


செய்முறை:
1. பாதங்கள் இரண்டும், இரண்டு அடி தள்ளி இருப்பது போல நேராக நிற்கவும்.
2. கைகள் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டிருக்க வேண்டும்.
3. தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி, இரண்டையும் இணைத்துக் கொள்ளவும்.

4. விரல்களை இணைத்துக் கொள்ளவும்.
5. இரண்டு கைகளும் காதுகளைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
6. இப்போது உடலை வலது பக்கம் சாய்த்து சில வினாடிகள் நிற்கவும்.
7. பின் நேராக நிற்கவும்.
8. அதேபோல், இடது பக்கம் சாய்த்து, சில வினாடிகள் கழித்து நேராக நிற்கவும்.

சுவாசம்:

இயல்பான சுவாசம்
நேர அளவு:
10 – 20 வினாடிகள்.
2 முதல் 3 சுற்று செய்யலாம்.
பயன்கள்:
இறுக்கமான முதுகுப்புறம் உள்ளவர்களுக்கு பயன்படும். ஒரு புறம் இறுகி, மறுபுறம் வயிறு தளர்வதால், வயிற்றுப்பகுதி தசைகள், தொய்வு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.


Thank You

ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழை!


கொத்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதுபோலவே கொத்தமல்லித்தழைக்கும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. அன்றாட சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்த மல்லித்தழையை தனியாக துவையல், சட்னி போன்ற வடிவங்களில் செய்து சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு. சிறுவயது முதல் கொத்தமல்லித்தழையை துவையல் போன்ற வடிவங்களில் சாப்பிட்டு வருவதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். வாயில் புண் ஏற்பட்டால், கொத்தமல்லித்தழையுடன் தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால்… புண் சரியாகும். இதேபோல் வயிற்றுப்புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு ரத்தத்தை சுத்திகரிப்பதில் கொத்தமல்லித்தழை முக்கிய பங்காற்றுகிறது.


நெய்யில் கொத்தமல்லித்தழையை வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால், அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் ‘டானிக்’குக்கு இணையான பலனைத் தரும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாதத்துடனோ அல்லது வேறு வடிவங்களிலோ கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கொள்வதால், நாளடைவில் பார்வை சரியாகும். மலச்சிக்கல், உடம்பு வலி உள்ள வர்கள் கொத்தமல்லித்தழையுடன் வெற்றிலை சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் பிரச்னை சரியாகும்.
Thank You

மூட்டு சவ்வுப் பிரச்னைக்கு ஸ்டெம் செல் சிகிச்சை


moottu savvub birasnaikku sdem sel sikichai
மூட்டுவலியை இளைய வயதினருக்கு வருவது, முதியவர்களுக்கு வருவது என இரண்டாகப் பிரிக்கிறது மருத்துவம். முதியவர்களுக்கு வயதின் காரணமாக மூட்டு தேய்ந்து மூட்டுவலி வருகிறது என்றால், இளம் வயதினருக்கு மூட்டுப் பிரச்னை வருவதற்கு முக்கிய காரணம், விளையாட்டு. போதுமான ஆரம்ப கட்ட பயிற்சிகளைச் செய்யாமல் திடீரென கடுமையாக விளையாடும்போது மூட்டில் கார்ட்டிலேஜ் எனும் குருத்தெலும்பு பாதிக்கப்படும். கார்ட்டிலேஜ் என்பது மூட்டின் முனையில் உள்ள சவ்வு. மூட்டுகள் அசையும்போது அதிர்வுகளைத் தாங்கவும், உராய்வைத் தடுக்கவும் இது உதவுகிறது. விபத்து, காயங்கள், முறையற்ற பயிற்சிகள் போன்றவற்றால் இது பாதிக்கப்படும்போது மூட்டில் வலி ஏற்படும். இதற்கு மருந்து, மாத்திரை, பிசியோதெரபி, லேப்ராஸ்கோப்
சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எல்லோருக்கும் முழுமையான பலன் தரும் என உறுதி தர முடியாது. சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். இதன் பயன்பாடு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் இருக்கும். 60 வயதில் இந்த சிகிச்சையைச் செய்தால் 75 வயது வரை பலன் தரும். 30 வயதில் இதைச் செய்தால் 45 வயதில் மூட்டில் மீண்டும் வலி தொடங்கும். எனவே, இவர்களுக்காகவே இப்போது புதிதாக புகுந்துள்ளது ‘ஸ்டெம் செல் கார்டிலேஜ்’ சிகிச்சை’. இதை எப்படிச் செய்கிறார்கள்? ஸ்டெம் செல்கள் என்பவை உடலின் அடிப்படை ஆதார செல்கள். ரத்தம், எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி ரத்தம் போன்றவற்றிலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்து, நம் தேவைக்கேற்ப எலும்பு, கார்ட்டிலேஜ், இதயம், கல்லீரல் என உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். மூட்டில் வலி உள்ளவர்களுக்கு இடுப்பு எலும்பிலிருந்து ரத்தத்தை எடுத்து ‘ஹார்வஸ்ட்’ எனும் கருவியில் வைத்து, ஸ்டெம் செல்களைப் பிரிக்கிறார்கள். அதே நேரத்தில், பயனாளியின் மூட்டுப்பகுதியில் இரண்டு மிகச் சிறிய துளைகளைப் போட்டு, அதன் வழியாக ஆர்த்ராஸ்கோப் கருவியை உள்ளே செலுத்தி, கார்ட்டிலேஜின் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்கிறார்கள். பிறகு அந்த எலும்பில் சிறு துளைகளைப் போடுகிறார்கள். இப்போது ‘ஹார்வஸ்ட்’டில் பிரித்தெடுக்கப்பட்டு தயாராக இருக்கிற ஸ்டெம் செல்களையும் ரத்தம் உறைய உதவுகிற வேதிப்பொருளையும் உள்ளே செலுத்துகிறார்கள். எலும்பில் துளை இடப்பட்ட இடங்களில் இந்தக் கலவை உள்வாங்கப்படுகிறது. இந்தக் கலவை உடனே உறைந்துவிடும் என்பதால் கார்ட்டிலேஜ் பகுதியில் ஒரு படிகம் உருவாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக கார்ட்டிலேஜ் திசுவாக வளரத் தொடங்குகிறது. அடுத்த ஒரு வருடத்தில் மூட்டில் அந்த இடம் முழுவதும் இயற்கையான கார்ட்டிலேஜ் திசுவாக மாறியிருக்கும். இதன் பலனால் மூட்டு வலி முற்றிலும் குணமாகும்.
Thank You

குழந்தை பிறப்பு: முன்னும் பின்னும் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடல்!

 பெரும்பாலான தம்பதியருக்குத் திருமணமான அடுத்தச் சில ஆண்டுகளில் குழந்தை பிறந்து விடுகிறது. குழந்தை பிறப்பு வாழ்க்கையின் மிகவும் முக்கியமான தருணம். இந்தத் தருணத்தைத் தவிர்க்க யாருமே விரும்புவதில்லை. இந்தத் தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருளாதார ரீதியாக என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார் நிதி ஆலோசகர் ஸ்ரீதேவி.
குழந்தை பிறப்பு எப்போது?
திருமணம் நடந்தவுடன் குழந்தை பிறப்பு குறித்த திட்டமிடல்களை கணவனும் மனைவியும் பேசி முடிவெடுத்துவிடுவது நல்லது. அதாவது, எத்தனை வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்துவிடுவது முக்கியம். குடும்பத்தின் பொருளாதார நிலை கருதி உடனேயோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ குழந்தை பெற்றுக் கொள்ளலாம். என்றாலும், குழந்தை பெறுவதை நீண்டகாலம் தள்ளிப்போடுவது சரியல்ல. அதிக பட்சம் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வதே சரி. அதற்குமேல் காலம் தாழ்த்தினால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கஷ்டங்களைப் பிற்பாடு அனுபவிக்க வேண்டியிருக்கும்.
குழந்தை பிறக்கும்முன்!
கருவுற்ற ஓரிரு மாதங்களிலிருந்தே செலவுகள் ஆரம்பிக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனை, மாத்திரைகள், ஸ்கேன் என மாதம் குறைந்தபட்சம் 1 முதல் 3 ஆயிரம் ரூபாய் செலவாக வாய்ப்புள்ளது. அடுத்துவரும் பத்து மாதங்களில் 10 முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவாக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்த்து, சத்துக் குறைவு, சர்க்கரை, வேறு ஏதாவது சிக்கல் ஆகியவற்றின் விளைவாக மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுக்கவேண்டிய தேவை இருந்தால், அதற்கு குறிப்பிட்ட அளவு தொகை செலவாகும். இதற்கெல்லாம் மருத்துவக் காப்பீட்டில் க்ளெய்ம் கிடைப்ப தற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
மேலும், பிரசவ செலவுகளுக்கு குறிப்பிட்ட ஓரிரு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்தான் கவரேஜ் வழங்குகிறது. அதிலும் நான்கு ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் இருக்கும். ஆனால், நிறுவனங்கள் வழங்கும் சில குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரசவ செலவு இவ்வளவு தான் ஆகும் என்று யாராலும் துல்லியமாகச் சொல்ல முடி யாது. ஏனெனில், சிசேரியன் பிரசவமா அல்லது நார்மல் பிரசவமா, எப்படி குழந்தை பிறக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நார்மல் பிரசவம் என்றால் ஒருவிதமாகவும் சிசேரியன் என்றால் வேறு விதமாகவும் மருத்துவக் கட்டணம் இருக்கும்.
இந்தக் கட்டணம் மருத்துவமனைக்கு மருத்துவமனை வித்தியாசப்படும். நார்மல் பிரசவம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும். அதுவே, சிசேரியன் 50 ஆயிரம் 70 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்.
குழந்தை பிறப்புக்குப்பின்!
கருத்தரித்த பெண்களில் சிலருக்கு எட்டு மாதத்திலேயே குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து, செலவுகள் எகிற தொடங்கும். உதாரணமாக, குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கும். திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனால், மருத்துவச் செலவுகள் வரும். சில மாதங்கள் கழித்து, ஊட்டச்சத்துக்கள் தரும் பானங்களை வாங்கித் தரவேண்டியிருக்கும். இதனுடன் தாயும் ஒரு வருடம் வரை சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருக்கும். இவற்றுக் கெல்லாம் ஒரு மாதத்துக்கு ரூ.3 முதல் 5 ஆயிரம்  வரை செலவாகலாம். ஆக, ஒரு வருடத்துக்கு ரூ.36 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகலாம். இந்தச் செலவுக்கான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வது அவசியம்.
இரட்டை குழந்தை!
சிலருக்கு இரட்டைக் குழந்தை பிறந்துவிடும். இப்படி இரண்டு குழந்தைகள் பிறக்கும் போது செலவுகளும் இரட்டிப் பாகும். செலவுகளைச் சமாளிக்கும் ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவிடுவது முக்கியம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்போது, தொடர்ந்து வேலைக்குப் போவ தற்கான வாய்ப்புக் குறைவு. அதேநேரத்தில், மருத்துவச் செலவு, பராமரிப்புச் செலவு, தினசரி செலவு என அத்தனை யும் அதிகமாகும்.
இன்ஷூரன்ஸ் அவசியம்!
பெரும்பாலான பாலிசிகளில் பிரசவத்துக்கு க்ளெய்ம் கிடைப்பதற்கான வாய்ப்புக் குறைவு. ஆனால், பிறந்த முதல் நாளிலிருந்தே குழந்தைக்கு கவரேஜ் கிடைக்கும். குழந்தைக்கு மஞ்சள் காமாலை, குறைவான எடையில் குழந்தை பிறக்கும்போது எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும். எனவே, திருமணம் முடிந்தவுடன் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஃப்ளோட்டர் பாலிசி, நிறுவனம் வழங்கும் குரூப் பாலிசி வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. தடுப்பூசிகள் போடுவதற்கு ஆகும் செலவுகளுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளெய்ம் கிடைக்காது.
வேலைக்குப் போகும் பெண்கள்!
குழந்தை பிறப்புக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கான ஏற்பாட்டை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது. அதாவது, எவ்வளவு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். குழந்தையை யார் பராமரிக்கப் போகிறார்கள், உறவினர்கள் யாரும் இல்லை யெனில் குழந்தையைப் பராமரிக்க எவ்வளவு தொகை செலவாகும் என்பதைத் திட்டமிடுவது அவசியம்.
இதேபோல, குழந்தை பிறப்புக்குப் பிறகு வேலைக்குப் போக முடியாதவர்கள் அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் வருமான இழப்புக்கு என்ன செய்ய வேண் டும் என்பதைத் திட்டமிடுவது அவசியம். அதாவது, சில வீடுகளில் மனைவியின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வீட்டுக் கடன் வாங்கியிருப்பார்கள். இதற்கான இஎம்ஐ-யை செலுத்துவது உள்பட எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். இதையெல்லாம்  செய்யத் தவறினால் தேவையில்லாத சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்’’ என்று முடித்தார் ஸ்ரீதேவி.
எதில் முதலீடு!
குழந்தை பிறப்பு சமயத்தில் எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப கல்யாணம் ஆனவுடனேயே ஆர்டி, லிக்விட் ஃபண்ட் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆர்டியைவிட சற்று அதிகமான வருமானம் லிக்விட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் கிடைக்கும். ஆர்டியில் இடையில் பணத்தை எடுக்கும்போது வட்டி இழப்பு இருக்கும்.
கடந்த ஒரு வருடத்தில் லிக்விட் ஃபண்ட் வகையைச் சார்ந்த சுமாரான ஃபண்டுகள் 8.5 சத விகிதமும், சிறந்த ஃபண்டுகள் 9.42 சதவிகிதமும், மோசமான ஃபண்டுகள் 6.38 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளது. அதுவே, கடன் சார்ந்த ஃபண்டுகள் கடந்த ஒரு வருடத்தில் 10 முதல் 11 சதவிகித வருமானம் தந்துள்ளது.

Thank You

வருமான வரி கணக்குத் தாக்கல்… வழிகாட்டும் ஆலோசனைகள்!

 டந்த 2007-ம் ஆண்டுக்குமுன் வருமான வரி ரிட்டர்ன் படிவம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றப்படும். இப்போதெல்லாம் ஆண்டுதோறும் புதுப் படிவம் என்றாகிவிட்டது. கூடவே, படிவங்களில் கூடுதல் விவரங்களைத் தரச்சொல்வதும் புதிய வாடிக்கையாக மாறியிருக்கிறது.
கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்தது.
வருமான வரி கணக்குத் தாக்கலின்போது குறிப்பிட வேண்டிய விவரங்கள் மற்றும் படிவங்களில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில், வரி கணக்குத் தாக்கல் விவரங்களில் கொண்டுவரப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்ப்போம்.
வெளிநாடு பயண விவரம்!
வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது வரிதாரரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விவரங்கள், வங்கிக் கணக்கு இருப்புத் தொகை போன்ற வற்றைக் குறிப்பிட வேண்டும் என ஏப்ரலில் மத்திய அரசு சொன்னது.
இதற்கு வரிதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், வெளிநாட்டு பயண விவரங்களை வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு ஜூன் மாதத்தில் தெளிவுப்படுத்தியது. இதற்குப் பதிலாக, பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என ஜூனில் அறிவித்தது.
வெளிநாட்டில் சொத்து!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில், கடந்த 2011-12-ம் ஆண்டுக்குமுன் வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தைக் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. மதிப்பீடு ஆண்டு 2015-16-ல் அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று சலுகை அளிக்கப் பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட, வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
வங்கிக் கணக்கு விவரங்கள்!
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் பட்ட வருமான வரிப் படிவத்தில் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, (நிதியாண்டு இறுதி) வங்கிக் கணக்குகளில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டு உள்ளது. இதற்குப் பதிலாக, இப்போது வங்கிக் கணக்கு எண்கள் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி, வரி கணக்குத் தாக்கல் படிவங்களில் கொண்டு வரப்பட் டிருக்கும் மாற்றங்களைப் பார்ப்போம்.
வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில், இந்த ஆண்டு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள ஐடிஆர்2ஏ (ITR2A) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். அதில் மூலதன ஆதாயங்கள் (கேப்பிட்டல் கெயின்ஸ்) குறித்து எதுவும் குறிப்பிடத் தேவை இல்லை.
இதுதவிர, ஐடிஆர் 2 (ITR2), ஐடிஆர் 2ஏ (ITR2A) படிவங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இவை மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் வரிதாரர் எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கிறது. இதற்குமுன், இந்தப் படிவங்கள் எல்லாம் 14 பக்கங்களைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
யார் எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான கோபால் கிருஷ்ண ராஜு விளக்கிச் சொன்னார். 
‘‘ஐடிஆர் (ITR) 1, 2, 2A, 4S, 3, 4, 5, 6, 7 என்ற படிவங்களில்தான் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருடம் சில முக்கிய மாற்றத்தோடு, நான்கு ஐடிஆர் 1, 2, 2A மற்றும் 4S படிவங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர் 4 எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு (AY 2015-16) ஏழு பக்கங்கள் கொண்ட ஐஆர்டி-2A புதிய ரிட்டர்ன் படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதை வியாபாரம் அல்லது தொழில் இல்லா வருமானம் மற்றும் மூலதன ஆதாயம் (Capital Gains) இல்லாத நபர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாதவர்கள் பயன்படுத்தலாம்ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வருமானம் மற்றும் லாட்டரி/ரேஸ் வருமானம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை பயன்படுத்த வேண்டும்.
ஆதார் (Aadhar) எண் உள்ளவர்கள், அதை ரிட்டர்ன் படிவத்தில் தெரியப்படுத்தலாம். ஆதார் எண் கட்டாயம் அல்ல. விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணைத் தெரியப்படுத்தலாம் (ITR 1, 2A, 2, 4S)உங்கள் வீட்டின் பெயர் அல்லது கட்டடத்தின் பெயர் அல்லது கிராமத்தின் பெயரை ரிட்டர்ன் படிவத்தில் (ITR 1, 4S) குறிப்பிட வேண்டும்.
வெளிநாட்டுப் பயணம் ஏதாவது மேற்கொள்ளப்பட்டு இருந்தால், பாஸ்போர்ட் எண்ணை ரிட்டர்ன் படிவத்தில் (ITR 2, 2A) குறிப்பிட வேண்டும்.  உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது உங்கள் ரீ-ஃபண்ட் எளிதாக (Re-fund) வருவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
ரிட்டர்ன் படிவத்தில் விவசாய வருமான விவரங்களைத் தெரிவிக்கும்போது, இந்த வருடம் கூடுதல் விவரங்களைச் சொல்ல வேண்டும். மொத்த விவசாய வருமானம், விவசாய செலவுகள், நிகர விவசாய வருமானம் மற்றும் கிரகிக்கப்படாத விவசாய இழப்பு ஆகிய (Unabsorbed Agricultural Loss) நான்கையும் தெரிவிக்க வேண்டும்.
ஐடிஆர் 2 படிவத்தைப் பயன்படுத்தினால் வெளிநாட்டு சொத்து உள்ளது என்று அர்த்தம் எனவே, அதன் விவரத்தை சொல்ல வேண்டும். கூடவே வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு அமைப்புகளில் நேரடி மற்றும் மறைமுக முதலீடு, வெளிநாட்டு அசையாச் சொத்து, வெளிநாட்டு இதர வருமானங்கள் போன்றவற்றையும் இந்தப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்” என விளக்கமாகச் சொன்னவர், ஒரு முக்கியமான எச்சரிக்கை யையும் எடுத்துச் சொன்னார்.
‘‘2014-15ம் ஆண்டில் அசையாச் சொத்து விற்று இருந்தால், மூலதன ஆதாய தொகையை (Capital Gains) மூலதன ஆதாயக் கணக்கில் (Capital Gains Account Scheme) ஆகஸ்ட் 31, 2015-க்குள் செலுத்த வேண்டும்" என்பதே அவர் சொன்ன எச்சரிக்கை. 

இ-ஃபைலிங்!
ஆன்லைனில் வரி கணக்குத் தாக்கல் செய்வது தொடர்பான விஷயங்களை ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கிச் சொன்னார். 
‘‘ரூ.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட அனைவரும் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் (இ -ஃபைலிங்) கணக்குத் தாக்கல் செய்வதை வருமான வரித் துறை 2013, மே மாதம் கட்டாயம் ஆக்கியது. வெளிநாட்டிலிருந்து வருமானம் வந்திருந்தால், அவரின் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் இ-ஃபைலிங் முறையில்தான் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
இ-ஃபைலிங்கை வரிதாரரே நேரடியாக அரசின் இணையதளம் மூலம் செய்யலாம். ஆடிட்டர்கள் அல்லது அதற்கு என தனியார் இணையதளங் களின் உதவியுடன் மேற்கொள்ள லாம்.  இலவசமாக இ-ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ செல்ல வேண்டும்.  புதிதாக இ-ஃபைலிங் செய்கிறீர்கள் என்றால் உங்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, இ-ஃபைலிங் செய்தவர்கள், யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் உள்ளே செல்லலாம்.  ஒருவருக்கு எந்த வகையில் வருமானம் வந்தது என்பதற்கு ஏற்ப  வருமான வரி (ஐடிஆர்) படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கூடவே, வரி கணக்கைத் தாக்கல் செய்ய உதவும் சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். டவுன்லோடு செய்த படிவத்தில் வருமானம் மற்றும் முதலீடு, வரி கட்டிய விவரங்களைச் சரியாக பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும்.
இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக உங்களின் டிஜிட்டல் கையெழுத்து இருந்தால், பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, ஐடிஆர் படிவம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப் போட்டு பெங்களூருவில் உள்ள வருமான வரி மத்திய பரிசீலனை மையத்துக்கு (Income Tax Department – CPC) முகவரிக்கு சாதாரண தபால் அல்லது விரைவு தபால்  மூலம் ஒப்புகை அட்டை இல்லாமல் இணைத்து அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: Income Tax Department – CPC Post Bag No.1, Electronic City Post Office, Bengaluru, Karnataka – 560
100சந்தேகத்துக்கு அழைக்க: 1800 4250 0025, +91-80-2650 0025 டிஜிட்டல் கையெழுத்து உங்களுக்கு இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பெங்களுரூவில் உள்ள சிபிசி அலுவலகத்துக்கு மூன்று மாதத்துக்குள் (120 நாள்கள்)அனுப்பி வைக்க வேண்டும். நகல் (ஜெராக்ஸ்) அனுப்பக் கூடாது. ஒரிஜினல்தான் அனுப்ப வேண்டும்.
இது பெங்களூரு சிபிசி அலுவலகத்துக்குச் சென்று சேரவில்லை என்றால், நீங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்று அர்த்தம். எனவே, அனுப்பும் முகவரியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
இ-ஃபைலிங் செய்யும் அளவுக்கு உங்களுக்கு கம்ப்யூட்டர் பரிட்சயம் இல்லை என்றால், ஆடிட்டர்கள் மூலம் இ-ஃபைலிங் செய்ய முடியும். இவர்களைத் தவிர்த்து,  இ-ஃபைலிங் செய்துதர பல வெப்சைட்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக ரூ.300 தொடங்கி ரூ.1,000 வரை வாங்குகின்றன. இந்தக் கட்டணம் என்பது ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம், அவரின் இதர வருமானம், மூலதன ஆதாயக் கணக்கு, வீட்டு வாடகை வருமானம் போன்றவற்றைப் பொறுத்துள்ளது.
ஆடிட்டர்கள் மற்றும் இ-ஃபைலிங் செய்துக் கொடுக்கும் நிறுவனங்களிடம் படிவம் 16-ஐ கொடுத்தால், அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்துவிடுவார்கள். பெங்களூரு வில் உள்ள சிபிசி அலுவலகத்துக்கு அவர்களே ஐடிஆர் V  அனுப்பி வைத்துவிடுவார்கள்.
இந்த இ-ஃபைலிங் செய்ய ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஆகும். இ-ஃபைலிங் முறையில் வரி கணக்குத் தாக்கல் செய்தால் ரீ-ஃபண்ட் விரைவில் கிடைக் கும்" என விளக்கமாகச் சொன் னவர்,  இ-ஃபைலிங் தொடர்பாக 2015 ஜூலை 13-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களையும் விளக்கிச் சொன்னார்.
‘‘இ-ஃபைலிங் செய்யும்போது இ-வெரிஃபிகேஷன் செய்தால்,  ஐடிஆர் V படிவத்தை பெங்களூருக்கு அனுப்பத் தேவை இல்லை.  இந்த இ-வெரிஃபி கேஷனை வரிதாரர் நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம்.
ஆடிட்டர் இதனை மேற் கொள்ளும்போது, பாதுகாப்புப் பிரச்னைகள் எழ வாய்ப்பு இருக் கிறது. காரணம், வரிதாரர் தன் நெட் பேங்கிங் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு தரவேண்டி இருக்கும். நெட்பேங்கிங் வசதி இல்லை என்றால், இ-ஃபைலிங் செய்யும்போது எலெக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோடு (Electronic Verification Code) உருவாக்க வேண்டும்.
இந்த கோடு, வரிதாரரின் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு அனுப்பப்படும். இது, 72 மணி நேரம் செல்லத்தக்கதாக இருக்கும். அதனைக் கொண்டு இ-வெரிஃபிகேஷன் முடித்துவிட லாம். இந்த இ-வெரிஃபிகேஷனை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது மூலமும் மேற்கொள்ளலாம். ஆனால், பான் எண் வாங்க தரப்பட்டிருந்த விவரமும், ஆதார் கார்டுக்காகத் தரப்பட்ட விவரங்களுக்கும் சரியாகப் பொருந்தி இருக்க வேண்டும். பல பேருக்கு இதில் சிக்கல் இருக்கிறது.
மேலும், இ-வெரிஃபிகேஷன் என்பது ரூ. 5 லட்சம் வருமானத் துக்கு கீழே உள்ளவர்களுக்கு  இ-மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு அனுப்படும் கோடு-ஆக இருக்கிறது. இது சுலபமான நடைமுறையாக இருக்கிறது. அதேநேரத்தில், ரூ. 5 லட்சம் வருமானத்துக்கு மேலே உள்ளவர்களுக்கு நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு மூலம் மட்டுமே இ-வெரிஃபிகேஷன் செய்ய முடியும் என்று இருக்கிறது.  இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் உள்ளன. அனைத்து வரிதாரர்களுக்கும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த வெரிஃபிகேஷனை மேற்கொண் டால் நன்றாக இருக்கும்” என்றார்.
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்தத் தகவல்களை எல்லாம் மனதில் கொண்டு இப்போதே தயாரானால், எந்தக் கஷ்டமும் இல்லாமல் செய்து முடிக்கலாமே!
Thank You

கல்லீரலைக் காப்பது நம் கையில்!

ணவுப் பொருட்களை செரிமானம் செய்ய உதவுவது, உடலுக்குத் தேவையான ஆற்றலை சேமித்துவைப்பது, நச்சுக்களை நீர்த்துப்போகச் செய்து வெளியேற்ற உதவுவது என உடலின் பல முக்கியப் பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் தடுக்க, நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, இந்த பொறுப்பான உறுப்புக்குக் கொடுப்பது இல்லை. மது மற்றும் வைரஸ் கிருமித் தொற்றால் கல்லீரல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்லீரல் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இதைத் தவிர்க்க முடியும். ‘கல்லீரல் பாதிப்பைத் தவிர்ப்பது நம் கையில்’ என்ற மையக் கருத்தில் இந்த ஆண்டு ‘உலக ஹெபடைட்டிஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது.
கல்லீரலில் ஏற்படக்கூடிய வீக்கத்தை ஹெபடைட்டிஸ் என்கிறோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெபடைட்டிஸ் ஏ முதல் இ வரை உள்ள வைரஸ் கிருமிகள்தான். ஹெபடைட்டிஸ் பி, சி தவிர மற்ற வகை கிருமிகளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், பி, சி வைரஸ் கிருமிகள் உயிரிழப்பு வரை கொண்டுவிடும். மற்ற வகை வைரஸ் கிருமிகளால் மஞ்சள் காமாலை ஏற்படும். அதை சரிபடுத்திவிட முடியும். இந்த வைரஸ் கிருமிகள் மாசடைந்த நீர், உணவுப் பொருட்கள் வழியாகப் பரவும். என்ன சாப்பிடுகிறோம், எங்கே சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே, இத்தகைய வைரஸ் கிருமித் தொற்றைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமான முறையில் தயாரான உணவு மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரையே எப்போதும் அருந்துவது நல்லது.
மிக மோசமான பி மற்றும் சி வைரஸ் கிருமிகள் ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவுகின்றன. இதில், உடலுறவு மூலம் பரவுவது மிகக் குறைவுதான். பெரும்பான்மையானோருக்கு ரத்தம் மூலமாகவே இந்த வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.
பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறும்போதும், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும், இந்த இருவகை வைரஸும் பரவுகின்றன. ஹெபடைட்டிஸ் பி வைரஸ் மட்டும் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடலுறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தை பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இப்போது, பச்சிளம் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசி அட்டவணையிலேயே ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால், எதிர்காலத்தில் இந்த வகை வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. ஹெபடைட்டிஸ் சி-க்கு தடுப்பூசி இல்லை. எனவே, இந்த வைரஸ் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இந்தியாவில் 10 சதவிகித மக்களுக்கு ஏதாவது ஒரு சூழலில் இந்த ஏ முதல் இ வரையிலான வைரஸ் கிருமித் தொற்று வந்து சென்றிருக்கும். இதைச் சரியாகக் கண்டறிந்து, சிகிச்சை எடுக்காதபோது அது கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.
பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்த்தல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்துதல், பாதுகாப்பான உடலுறவு போன்றவை ஹெபடைட்டிஸ் பி, சி பாதிப்பைத் தவிர்க்கும். தனிநபர் சுகாதாரம் பராமரிப்பது, சுகாதாரமற்ற இடங்களில் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் ஹெபடைட்டிஸைத் தடுக்கலாம். இவை அனைத்தும் நம் கையில்தான் உள்ளன என்பதை உணர்ந்து செயல்பட்டால், ஹெபடைட்டிஸ் பாதிப்பை முற்றிலுமாக வெல்ல முடியும்.

Thank You

அல்சருக்கு இருக்கு அருமையான மருந்து


அல்சர் அல்லது வயிற்றுப் புண்ணை, தொடர் சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு/சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும்.
அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். ரத்த வாந்தி அல்லது கருநிற மலம் வெளியேறும். அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு சிறுகுடல் பாதையை அடைக்கும். சாப்பிட்டவுடன், வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பது, இந்த மாதிரி அடைப்பின் அறிகுறி.

சிகிச்சை: குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகாவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும். 2-3 வாழைப்பழங்களை பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடித்தால் பலனளிக்கும்.
வில்வ இலைகள்/பழங்களை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும். பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து, கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம். மாதுளம் பழச்சாறு அல்சருக்கு நல்லது. திரிபாலா சூரணம் (1 தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில், இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா ஆகியவற்றை தவிர்க்கவும். உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும். மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணெய், காரம் செறிந்த உணவுகளை தவிர்க்கவும். பலமான, வலுவான வயிறு குடல் சுவர்களை அமிலம் எப்படி பாதிக்கும்? வயிற்றின் சுவர், கவசம் போன்ற புறத்தோலால் (Epithelium) மூடப்பட்டுள்ளது. டியோடினம் (சிறுகுடலின் முதல் பகுதி) காரத்தன்மை உள்ள சளி சுரப்புகளால் பாதுகாக்கப்படுகிறது.
டியோடினத்தில் அமைந்துள்ள பிரன்னர் (Brunner) சுரப்பிகள், இந்த சளிப்பொருளை சுரக்கின்றன. இருந்தும் இந்த கவசங்கள் சிதைக்கப்பட்டு, புண்கள் உண்டாகும் காரணங்களை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை என்கின்றனர் டாக்டர்கள்.


Thank You