Thursday, June 19, 2014

நகர்ப்புற வீடுகளில் வளரும் காய்கறி தோட்டங்கள்


வீடுகளில் தோட்டம் வளர்த்து பராமரிப்பது ஒரு தனிக்கலை. கிராமப்புறத்தில் தோட்டம் அமைப்பதற்கேற்ற வசதிகள் அதிகம். ஆனால், நகர்புறத்தில் இந்த வசதி குறைவுதான். அதையும் தற்போது சாத்தியமாக்கி வருகிறார்கள், இன்றைய வேளாண் விஞ்ஞானிகள்.
சதுர அடிக்குள் அழகிய தோட்டத்தை உருவாக்க வழிகள்:
* ஜன்னலில் பொருந்துகிற அளவில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் மண்ணை நிரப்பி, உங்களுக்குப் பிடித்தமான செடியை அதில் நடுங்கள்.
* பால்கனியில் இருந்து வரும் சூரிய ஒளி செடியின்மீது படும்படி பக்கெட்டை நேராக வைத்துக் கொள்ளுங்கள்.
* தென்பக்கத்தில் இருந்து சூரிய ஒளி செடியின்மீது விழுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால், செடி வேகமாக வளரும். படர்கொடி வகை தாவரங்கள் இன்னும் வேகமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
* இதன் விதைகள் சில சமயங்களில் வீட்டின் வெளிப்புற சுவரையும் தாண்டி, மண்தரையில் விழுந்து வளர ஆரம்பித்து விடுகிறது. இதனால், புதிதாக மரம் நட்ட பலனும் உங்களுக்கு கிடைக்கிறது.
* வேம்பு, கொய்யா, மாதுளம்பழம் போன்ற மரங்களை உங்கள் வீட்டைச் சுற்றிலும் வளர்த்து வந்தால் பிற்காலத்தில் அவற்றால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
* சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன.
* நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது.
* நகர்ப்புற மக்களும் இனி விவசாயிகளாக மாறலாம். உங்கள் வீட்டிலேயே ஒரு ஓரமாக விரும்பிய தாவரங்களை வளர்த்து அழகிய கிராமப்புற சூழலை உருவாக்கலாம். அதனால் கிடைக்கும் பலன்களால், தனியொரு மனிதனுக்கு உண்டாகும் உணவுப்பஞ்சமும் தீர்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம் என்ற வார்த்தைகள் இனி கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.

No comments:

Post a Comment