Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, February 19, 2015

கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ள‍லாமா?


மீன் உணவை கர்ப்பிணிப் பெண்கள்  உட்கொள்ள‍
லாம். ஏனெனில் மீன்களில்ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது அவைகள் உங்களுக்கும் உங்களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் பல நன்மைகளை அளிக்கும்.
ஆனால் வயிற்றில் உள்ள உங்கள் சிசுவிற்கு எந்த ஒரு பாதிப்புள் ஏற்படாமல் இருக்க, கடல் உணவுகளை உண்ணும் போது நீங்கள் கூடுதல் கவனத்தை மேற் கொள்ளவேண்டும். சில கடல்வாழ்மீன்களில் பாதரசத் தின் தடயங்கள் இருக்கும். இது வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு பல ஆபத்துக்களை உண்டு பண் ணலாம்.
மீனை நன்றாக சமைத்தாலும் கூட இது அப்படியேதான் இருக்கும். கர்ப்ப காலத்தில் கூடுதல் அளவிலான பாதரசத்தை உட்கொண்டால், சிசுவின் மூளை மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பின் வளர்ச்சியை இது வெகு வாக பாதிக்கும். அதனால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, மீன்கள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வாரம் ஒருமுறை என மாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள்உண்ணும் மீன்பச்சையாக இல்லாமல் நன்றாக சமைக்க ப்பட்டிருக்கவேண்டும். சரியாக சமைக்கப் படாத மீனால், கர்ப்பி ணி பெண்களுக்கு ஒட்டுண்ணி அல்லது பாக்டீரியா நோய்கள் தாக்கக்கூடும். இது அப்படியே சிசுவிற்கு பரவும். அத னால் எதிர்பாரா விளைவுகள் ஏற்படலாம்.
வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன் போன்ற பெரிய கடல் மீன்களை தவிர்த்து விடுவது நல்லது. மாறாக உள்ளூர் குளத்தில் கிடைக்கும் கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ண லாம். டப்பாவில் அடைக்க ப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்த்து விடுவது நல்லது.


நன்றி.......
                 டாக்டர்.சமீனா

No comments: