Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, August 10, 2015

ரத்தம் சுத்திகரிக்கும் மல்லித்தழை!


கொத்தமல்லி என்றதும் தனியா நம் நினைவுக்கு வரும். தனியாவுக்கென்று நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதுபோலவே கொத்தமல்லித்தழைக்கும் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. அன்றாட சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்த மல்லித்தழையை தனியாக துவையல், சட்னி போன்ற வடிவங்களில் செய்து சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு. சிறுவயது முதல் கொத்தமல்லித்தழையை துவையல் போன்ற வடிவங்களில் சாப்பிட்டு வருவதால் பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும். வாயில் புண் ஏற்பட்டால், கொத்தமல்லித்தழையுடன் தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால்… புண் சரியாகும். இதேபோல் வயிற்றுப்புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு ரத்தத்தை சுத்திகரிப்பதில் கொத்தமல்லித்தழை முக்கிய பங்காற்றுகிறது.


நெய்யில் கொத்தமல்லித்தழையை வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால், அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் ‘டானிக்’குக்கு இணையான பலனைத் தரும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாதத்துடனோ அல்லது வேறு வடிவங்களிலோ கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கொள்வதால், நாளடைவில் பார்வை சரியாகும். மலச்சிக்கல், உடம்பு வலி உள்ள வர்கள் கொத்தமல்லித்தழையுடன் வெற்றிலை சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் பிரச்னை சரியாகும்.
Thank You

No comments: