Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, March 22, 2013

உயில் எழுதுவது எப்படி


உங்கள் உயிலை எழுதுங்கள்
முந்தைய நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ததன் மூலம் உங்கள் உயிலை நீங்கள் திட்டமிட்ட பிறகு, 1925ஆம் வருட இந்திய வாரிசுச் சட்டத்தின் 74ஆம் பிரிவின்படி, “எளிய, உறுதியான, சந்தேகத்திற்கிதமிழ்லாத மொழியில் உங்கள் உயிலை” எழுதுங்கள்.
உங்களுக்குச் சந்தேகம் இருந்தாலோ, ஆலோசனை தேவைப்பட்டாலோ, இறுதிப் பத்திரத்தை எழுத ஒரு தகுதி வாய்ந்த, புரஃபஷனலான ஒரு வழக்கறிஞரை அணுகலாம். ஒரு புரஃபஷனலைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய உயில் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகக்கூடியதாகவும் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஆரம்ப கட்ட உயிலை ஒழுங்காக எழுதிவிட்டால், புரஃபஷனல்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்காது. இதனால், அவர்களது கட்டணம் குறையும். ஒரு உயிலை எழுத புரஃபஷனலையோ, ஹெல்ப் ஏஜ் இந்தியாவையோ பயன்படுத்தும் செலவு என்பது, நீங்கள் உயில் எழுதாமல் இறந்தால் எழும் சட்டச் சிக்கல்களைச் சமாளிக்க ஆகும் செலவைவிட மிகக் குறைவு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உயிலில் கையெழுத்திடுங்கள். சாட்சிகளின் கையெழுத்துகளையும் பெறுங்கள்
18 வயதுக்கு மேற்பட்ட இருவர் உங்கள் உயிலுக்கு சாட்சியமளிக்க வேண்டும். இந்த இரு சாட்சிகளில் ஒருவர், அது உண்மையான உயில்தான் என்று சான்றளிக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். தவிர, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அந்த உயிலில் நீங்கள் கையெழுத்திட்டதாக உறுதியளிக்க வேண்டும். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நீங்களும் உங்கள் இரண்டு சாட்சிகளும் இருந்து அந்த உயிலில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கையெழுத்தைச் சான்றளிப்பது என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உயிலில் கையெழுத்திட்ட பிறகு ஒவ்வொருவரும் அந்த உயிலில் கையெழுத்திடலாம். ஒவ்வொரு சாட்சியின் கையெழுத்தின் கீழேயும் அவர்களது பெயர், வயது, தற்போதைய முகவரி, தொழில் ஆகியவை தெளிவாக எழுதப்பட வேண்டும். அந்த உயிலின் மூலம் பலன் பெறுபவர்களோ, அவர்களது கணவனோ, மனைவியோ உயிலுக்குச் சாட்சிக் கையெழுத்திட முடியாது. அப்படிச் செய்தால், இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 67இன் படி அந்த உயிலின் பிற அம்சங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்றாலும் கையெழுத்திட்ட நபருக்கோ, அவரது கணவன்/மனைவிக்கோ நீங்கள் எழுதிவைத்த சொத்து சேராது.
உயிலைப் பதிவு செய்தல்
ஒரு பதிவாளர் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல. ஆனால், அப்படிச் செய்வது நல்லது. உயிலைப் பதிவு செய்வதன் மூலம் அதன் உண்மைத் தன்மை அதிகரிக்கும். வங்ககளும் அதிகாரிகளும் பதிவு செய்யப்பட்ட உயிலையே பல சமயங்களில் கேட்பார்கள். நீங்களும் உங்கள் உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இரண்டு அசல், கையெழுத்திட்ட உயில் பத்திரங்களுடன் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய புகைப்படத்டின் இரண்டு பிரதிகளையும் அடையாளச் சான்றையும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த கட்டணத்தில் உயிலைப் பதிவு செய்துவிடலாம். இதற்கு நீண்ட நேரம் ஆகாது. பெரும்பாலும் காலையிலேயே முடித்துவிடலாம்.
உயில் பத்திரத்தை பாதுகாப்பாக வையுங்கள்
உங்கள் உயிலைப் பத்திரமாக வைப்பது மிக முக்கியம். உங்களது நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர், உயிலைச் செயல்படுத்துபவர்களுக்கு வங்கி, பதிவாளர், சார் பதிவாளர், முக்கியமான ஆவணங்களைத் தெரியப்படுத்துவது நல்லது. உயிலைப் பத்திரப்படுத்துவதற்கு முன்பாக, உங்களுக்காகவோ, உங்களுடைய உறவினருக்காகவோ அந்த உயிலைப் பிரதி எடுத்து வைக்கலாம்.

No comments: